Oru Devathai Paarkkum Neram Ithu - 21 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 21

Featured Books
Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 21

விஷால் கேக் வெட்டி எல்லோருக்கும் கொடுத்தான். சுபாவும் தீபாவும் உற்சாகமாக ஆட்டம் போட்டனர். பிறகு விஷாலும் அதில் கலந்து கொண்டான் . இரவு அங்கேயே தங்குமாறு மற்ற மூவரையும் கேட்டுக்கொண்டாள் சுபா.சுபா ரொம்ப ஹாப்பி யா இருக்கு என்றான். கஷ்டப்பட்டு பர்மிஷன் வாங்கினேன் ஹாஸ்டல் warden கிட்டே என்றாள்.
அவளுக்கு ஒரு சாரி வாங்கி வைத்திருந்தான். அதை போய் கட்டிகொண்டு வந்து காட்டினாள். சூப்பர் ஆக இருக்கு என்றார்கள் அனன்யாவும் தீபாவும்.நாம கீழே போவோம் என்றாள் அனன்யா தீபாவை பார்த்து அதெல்லாம் வேண்டாம் நீங்க ரெண்டு பேரும் இங்கே இருங்க . குழுவாக போட்டோ எடுத்து கொண்டனர். சுபா தோளில் ஒரு கையும் அனன்யா தோளில் மறு கையும் போட்டிருந்தான். தீபா நல்லா வந்திருக்கு . தீபாவுக்கு கேக் ஊட்டுவது போல ஒரு புகைப்படம் எடுத்தார்கள்.

மணி காலை 2 ஆகி விட்டிருந்தது. இன்னைக்கு ஈவினிங் போகணும் என்றாள் சுபா. கொஞ்ச நேரம் தூங்குங்க என்று மூவரையும் கீழே அனுப்பினான். ஏதாவது வேணும்னா என்னை கூப்பிடு என்று அனன்யா சொன்னாள் . சரி . மனது முழுக்க கொண்டாட்டமாக இருந்தாலும் சுபாவுடன் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம் என நினைத்தான்.அனன்யாவும் தீபாவும் காலேஜ் போனார்கள். இவன் லேட் ஆக எழுந்தான். சுபா அவனுக்கு ஸ்பெஷல் ஆக சமைத்திருந்தாள். இதெல்லாம் எதுக்கு நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு. உன் கூட இருக்குற நேரமே கொஞ்சம் இதுல ரெஸ்ட் எடுத்தா ? சரி வா சாப்பிடுவோம் என்றான். அனன்யாவும் , தீபவும் சாயங்காலம் ஸ்டேஷன் வருவதாக சொல்லி இருக்கிறார்கள். நாம மூவி போவோமா விஷால். நிச்சயமா . 11 மணி ஷோ புக் பண்ணியிருக்கேன். சாப்பிட்டு முடிந்ததும் நான் வீட்டுக்கு போயிட்டு வரேன் சுபா . வந்து உன்னை பிக்அப் பண்ணிக் கொள்கிறேன் என்றான்.

10 30 அளவில் வந்து விட்டான். போவோமா சுபா. சுபா நேர்த்தியாக உடை உடுத்தி இருந்தாள். படம் அவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது.படம் முடிந்து ஹோட்டல் போய் சாப்பிடுவோமா ? வீட்டுக்கு போவோமா என்றான். வீட்டுக்கே போய்விடலாம் என்றாள். சுபா அம்மா நன்றாக சமைத்திருந்தாள். இரண்டு பேரும் மாடிக்கு போனார்கள். இப்போ ஹாப்பி தானே என்றான் விஷால். எனக்கு ரொம்ப பேராசைதான் விஷால். உன்னை பார்த்துகிட்டே இருக்கணும் . உன் பேச்சை கேட்டுகிட்டே இருக்கணும் . ம்ம் இங்கே வா என்று அவளை அழைத்தான்.அவள் வெட்க புன்னகை பூததாள். ஊட்டி போவோமா மறுபடி என்றான். நீ ரொம்ப மோசம் வேண்டாம் என்றாள். உனக்கு பிடிக்கலையா ? ஆமாம் எது நீ பாதியிலேயே என்னை விட்டுட்டு போறது .. சாரி சுபா. நான் சும்மா சொன்னேன் அதுக்கு எதுக்கு சாரி.
மணி 3 ஆகி இருந்தது அனன்யா ஃபோன் பண்ணியிருந்தாள். சினிமா எப்படி இருந்தது என்று கேட்டாள். சூப்பர் என்று சுபா சொன்னாள். நாங்க இன்னும் அரைமணி நேரத்துல ஸ்டேஷன் வந்து விடுவோம் என்று சொன்னாள். நாங்களும் வந்து விடுகிறோம் என்று சொன்னான்.

சுபா நான் போய் ரெடி ஆகுரேன். ஆட்டோ ல போலாம் என்றாள். கிளம்பி ஸ்டேஷன் போய் விட்டார்கள் சுபாவும், விஷாலும். அனன்யா , தீபா இருவரும் இவர்களை வரவேற்றனர். ம்ம் இப்பவே புது மாப்பிள்ளை பொண்ணு மாதிரி இருக்கீங்க என்றாள் தீபா.ஃபர்ஸ்ட் நைட் தான் பாக்கி என்றாள் அனன்யா. நீ ஏண்டி அதை இப்போ சொல்லி கிண்டல் பண்ணுறே . சரி சுபா பத்திரம் என்றான். அவளை அணைத்தான். அவள் கண்கள் கலங்கி இருந்தன. அனன்யா துடைத்து விட்டாள். டிரைன் கிளம்பி விட்டது . ரொம்ப கஷ்டமா இருக்குது என்று அங்கேயே உட்கார்ந்து விட்டான் விஷால். விஷால் இன்னும் எவ்வளவோ இருக்கு அதுக்குள்ள சோர்ந்து போய் விட்டால் எப்படி என்றாள் அனன்யா .

விஷால் வீடு திரும்பினான். சுபா நினைப்பு ,அவள் அழுத விதம் இவனுக்கு மனதை பிசைந்தது . இரவு அப்படியே உறங்கி போனான். காலையில் சுபா மெசேஜ் பண்ணியிருந்தாள் .காலேஜ் வாழ்க்கையில் இத்தனை திருப்பங்களை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.எங்களையும் சினிமாவுக்கு கூப்பிட்டு போயிருக்கலாம் என்றாள் அனன்யா. நெக்ஸ்ட் டைம் போவோம். தீபா எதுவும் சொல்லவில்லை. மூவரும் கேண்டீன் பெஞ்சில் அமந்திருந்தனர். என்னைக்கு சென்னை போற விஷால் ? இந்த வாரம் சண்டே ..உனக்கு ஏதாவது வாங்கணுமா ?ஒண்ணும் வேண்டாம். உனக்கு தீபா எனக்கு ஒரு ஜீன்ஸ் . சரி தீபா . உன் அளவுதான் எனக்கு தெரியுமே என்றான் . தீபா வெட்கமாக சிரித்தாள். எத்தனை நாள் புரோகிராம் என்றாள் அனன்யா . மூன்று நாட்கள். மூணு நாளா ? அதெல்லாம் சீக்கிரம் ஓடி விடும் .

விஷால் சென்னைக்கு போய் விட்டான். தீபாவும், அனன்யாவும் கொஞ்சம் சோகமாக அவன் இருந்தா நல்லா இருக்கும் என்றனர். ஃபோன் பண்ணுவோமா அவன் 10 மணிக்கு மேலதான் பண்ண சொல்லியிருக்கான. மணி 9 தான் ஆகுது . சரி 10 மணிக்கே பண்ணுவோம். விஷால் அனன்யா ப்ராஜக்ட் கன்பர்ம் 3 மாசம். அதெல்லாம் வேண்டாம் விஷால் .அத்தனை நாள் உன்னை பிரிஞ்சி இருக்க முடியாது. இது ரொம்ப முக்கியமான ப்ராஜக்ட் அனன்யா . நான் இடையில வந்து உன்னை பாத்துக்கிறேன். தீபா எப்படி இருக்கா நல்லா இருக்கா .. சரி அனன்யா அப்புறம் பேசுறேன் . 3 மாசம் ப்ராஜக்ட் என்று சொன்னாள் அனன்யா . தீபாவும் வருத்தபட்டாள்.

சென்னையில் இருந்து வந்து விட்டான். அனன்யா, தீபா காலேஜ் போயிருந்தார்கள்.சுபா ஃபோன் பண்ணியிருந்தாள். எதுக்கு 3 மாசம் சென்னைல வேற வழி இல்லை சுபா. என்னவோ பண்ணு என்றாள்.
அனன்யா சாயங்காலம் வீட்டுக்கு வந்திருந்தாள் . வீட்டுக்கு போகலையா நீ . என்னவோ வீட்டுக்கு போகவே பிடிக்கலை. அங்க யார் இருக்கா ? சரி உட்கார். ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வரேன். அவளுடைய முகம் வெளுத்து போயிருந்தது . நேத்தும் நைட் ஸ்டடியா என்றான். ஆமாம். அவள் முகம் கழுவி ஸ்நாக்ஸ் சாப்பிட்டாள். நீயும் எடுத்துக்க விஷால். நானும் எனக்கு ப்ராஜக்ட் சென்னைல வேணும்னு கேட்டேன் மத்த மெம்பர்ஸ் நெறைய செலவு ஆகும்னு சொன்னதால இங்கேயே ப்ராஜக்ட் பண்ணுறேன் என்றாள்.

சரி என்னை வீட்டுல டிராப் பண்ணு . வண்டி என்ன ஆச்சு சர்வீஸ் விட்டு இருக்கிறேன். சரி இரு டிரஸ் மாத்திட்டு வரேன். ஓகே விஷால். உள்ளே வா விஷால் என்றாள். நான் போய் குளித்து விட்டு வரேன் நீ டிவி பார்த்து கொண்டு இரு என்றாள். புது மலராக வெளியே வந்தாள். அப்படி பார்க்காதே விஷால் என்றாள். டீ போட்டு கொடுத்தாள். நைட் வெளியே போய் சாப்பிடுவோமா தீபாவையும் வர சொல்லுறேன். அவளுக்கு உடம்பு சரியில்லையாம் . நாம போவோம் என்றாள். என்னவாம் அவளுக்கு ? அதான்பா லேடீஸ் மேட்டர் என்றாள். சரி சரி .
மணி 7 30 ஆகி இருந்ததது.கிளாஸ் எப்படி போகுது . ஹெச் ஓ டி உன்னை விசாரிச்சார் . நீ சென்னைல ப்ராஜக்ட் பண்ணுறேன்னு சொன்னதும் சந்தோஷபட்டார். சரி ஒரு அரை மணி நேரம் தூங்குகிறேன் . நீ டிவி பாரு 8 மணிக்கு போவோம் என்றாள்.சரி.

8 மணி போல ரெஸ்டாரன்ட் போனார்கள். சென்னைல எங்க தங்குவ? ஃபிரண்ட்ஸ் ரூம் இருக்கு. நல்லா இருக்குமா அட்ஜஸ்ட் பன்னிக்க வேண்டியதுதான் .உனக்கு என்ன வேணும் விஷால் என்று கேட்டு ஆர்டர் செய்தாள்.மனசே சரியில்ல விஷால். சுபா ஒரு பக்கம். நீ ஒரு பக்கம். எப்போ போகணும் விஷால் இன்னும் ரெண்டு வாரத்துல. அனன்யா நீ அப்படி பீல் பண்ணாதே, எல்லாம் நம்ம ஃப்யூச்சர் நல்லா இருக்கணும் அவ்ளோதான். அனன்யாவை வீட்டில் விட்டான். இன்னும் கொஞ்ச நேரம் இரேன் விஷால் . இல்லை அனன்யா நான் போய் ப்ராஜக்ட் சம்பந்தமாக இன்னும் சில பேரை பார்க்கணும் என்றான். சரி போய்ட்டு வா என்றாள்.

அந்த வாரம் எப்படியோ ஓடிவிட்டது .சென்னைக்கு போவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தான் விஷால். அனன்யாவும் அவள் ப்ராஜக்ட்டில் busy ஆகிய இருந்தாள். தீபா காலேஜ் வந்ததும் விசாரித்தான். இப்போ பரவாயில்லை என்றாள். என்னையும் சென்னை அழைச்சிட்டு போ . நானும் வரேன் உனக்கு சமைத்து போடுகிறேன் என்றாள். விஷால் சிரித்தான்.தீபா மூனே மாசம் அப்புறம் ஜாலி தான் என்றான். ஜீன்ஸ் பாண்ட் குடுத்தான். சூப்பர் என்றாள்.நாளைக்கு நைட் உங்க வீட்டுக்கு வரேன் என்றான். அனன்யாவிடம் சொல்லிவிடு . அனன்யா வரவில்லை அவளுக்கு வீட்டில் வேலை இருந்தது . கொஞ்ச நேரம் படித்து கொண்டிருந்தான். தீபா சிஸ்டம் பார்த்து கொண்டிருந்தாள். அனன்யா 11 மணி போல ஃபோன் பண்ணினாள். சாரி விஷால் கொஞ்சம் வேலை என்றாள். அதெல்லாம் நீ கவலைபடாதே நான் படிக்கிறேன் பொறுப்பாக என்றான்.சரி விஷால்.

தீபா டாக்டர் கிட்ட மறுபடி போனியா ? ரெண்டு மாசம் கழித்து வர சொன்னாங்களே இல்ல விஷால் நாளைக்கு நம்ம போறோம் என்றான். இல்லைனா அனன்யாவை கூட்டிக்கொண்டு போ என்றான்.அவசியம் போ என்றான். மறுபடி மயக்கம் வந்தால் கஷ்டம் என்றான். சரி விஷால். தீபா தூங்கி விழுந்தாள். உள்ளே போய் படு தீபா என்றான். நான் இங்கேயே படுத்து கொள்கிறேன் என்று அவன் மடியில் படுத்தாள்.
அவள் தூங்கியும் விட்டாள். தீபா அம்மா வந்து கூட்டி போனாள். மறுபடி அனன்யா ஃபோன் செய்தாள். என்ன பண்ணுறே விஷால். இப்போதான் தீபா கீழே போய் தூங்க போனா . நான் இங்கேயே தூங்க போறேன். எனக்கு தூக்கம் வரலை விஷால். அன்னிக்கி பாடுனியே பாட்டு அதை கேட்டுட்டு தூங்குறேன் என்றாள். இவன் பாடுவதை கேட்டதும் விழுந்து விழுந்து சிரித்தாள். சரி விஷால் குட் நைட் என்றாள்.

தீபா நாலு மணிக்கு டீ உடன் வந்து எழுப்பினாள். இவன் முகம் கழுவி வந்தான். நீ குடிச்சியா . ம் என்றாள். அந்த அதிகாலை பொழுதிலும் அவள் மிக அழகாக இருந்தாள் . ரொம்ப அழகு எது இந்த நைட்டி. அப்ப நான் இல்லையா ? நீ ரொம்ப ரொம்ப அழகு . அவளை இழுத்து பிடித்தான். டீ குடி முதல்ல என்றாள். அவள் உதட்டில் முத்தமிட்டான் அவள் அவன் மேல் சாய்ந்தாள். உள்ளே ஒண்ணும் போடலையா . சீ என்றாள். சரி அப்போ வேண்டாம். வேணும் என்றாள். அவள் கண்கள் அகல விரிந்தன.அவள் இவனை அணைத்ததுகொண்டு சென்னை எல்லாம் போக வேண்டாம் என்றாள். உன்னை விட்டு எங்கையும் போக மாட்டேன் டெய்லி ஃபோன் பண்ணுவேன் என்றான். அவளுடைய மார்புகள் இவன் மேல் பதிந்தது. தீபா நீதான் அனன்யா வை பார்த்துக்கணும் . சரி விஷால். அவள் நைட்டி ஜிப்பை அவிழ்க்க போனாள். இதுக்கு மேல தாங்காது வேண்டாம் என தடுத்து விட்டான். நீ போய் தூங்கு இல்லை கொஞ்சம் வேலை இருக்கிறது என்றாள். சரி நான் கொஞ்சம் படிக்கிறேன் என்றான்.

அனன்யா நைட் ஒரே ஜாலியா என்றாள். அதுக்குள்ளே சொல்லி விட்டாளா . அனன்யா முகம் வாடி இருந்தது. இன்னுமா நீ கவலை படுறே என்றான். எனக்கு வேற வழி இல்லை. இல்லைனா நானும் உன் கூடவே வந்து விடுவேன் சென்னைக்கு என்றாள்.இன்னைக்கு நைட் வருவியா ? ட்ரை பண்ணுறேன் விஷால். நீ அவ கூட ஜாலியா இருக்க போல என்னை விட்டுட்டு . என்ன பேச்சு இது.சரி விஷால் பார்ப்போம் என்றாள். ஹெச் ஓ டி கூப்பிட்டு அனுப்பினார். பொறுப்பு வந்துட்டு போல என்றார். ஆமாம் சார் . ஜாக்கிரதையா இருப்பா சென்னைல என்றார். ஓகே சார். தீபா வீட்டில் கெஸ்ட் வந்து விட்டார்கள்.இவன் வீட்டிலேயே இருந்தான்.

சுபா ஃபோன் பண்ணியிருந்தாள் என்ன விஷால் என்ன பண்ணுறே என்னை மறந்து விட்டாயா என்றாள். இல்லை சுபா ரிசல்ட் எல்லாம் வந்து விட்டதா ? ஆமாம் நீ எப்படியும் நல்ல ரேங்க் வாங்கியிருப்ப. ஆமா விஷால். ட்ரீட் எப்போ? நீ சென்னை போற அன்னிக்கி நான் வரேன் விஷால். ரொம்ப சந்தோஷம் .அனன்யாவுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான். வீட்டுக்கு வரியா இப்போ நான் ஃப்ரீ என்றாள். அவளை கட்டி அணைத்தான். ஏதாவது கொண்டு வரவா சாப்பிட அதெல்லாம் ஒண்ணும் வேணாம். அவள் அப்போது நீல நிற சுடிதார் அணிந்திருந்தாள்.எனக்கு இந்த கலர் ரொம்ப பிடிச்சிருக்கு என்றான். தாங்க்ஸ் விஷால் என்றாள்.