Oru Devathai Paarkkum Neram Ithu - 19 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 19

Featured Books
  • પ્રેમ થાય કે કરાય? ભાગ - 2

    કંકોત્રી માનવી ઘરનો દરવાજો ખોલે તો સામે તેના જાની દુશ્મન એવા...

  • લવ યુ યાર - ભાગ 66

    "કાં તો આ ઓર્ડર જવા દેવો પડે અથવા તો પૈસાની વ્યવસ્થા કરવી પડ...

  • નિતુ - પ્રકરણ 37

    નિતુ  : ૩૭ (લગ્ન) નિતુએ દરવાજા તરફ દોડ લગાવી અને દરવાજે ગાડી...

  • ખજાનો - 47

    ( આપણે જોયું કે રાજાએ નુમ્બાસાને માત આપવા કોઈ પ્લાન બનાવ્યો...

  • ભાગવત રહસ્ય - 80

    ભાગવત રહસ્ય-૮૦   વૈષ્ણવો -પ્રેમથી અદ્વૈત માન્યું છે. શંકરાચા...

Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 19

விஷால் ரோஸ் வாங்கிகொண்டு காலேஜ் போனான். அனன்யாவுக்கும் , தீபாவுக்கும் ரோஸ் வைத்து விட்டான். ரோஸ் அம்சமா இருக்குது உனக்கு என்று தீபாவை பார்த்து சொன்னான். அனன்யா அமைதியாக இருந்தாள்.
தீபா ஏதோ வேலையாக வெளியே போனாள். நீ ஒண்ணும் என்னை தப்பா நினைக்கலையே . நிச்சயமா இல்லடா என்றாள்.சுபா மறுபடி எப்போது வருவாள் என்று கேட்டான் அனன்யாவிடம். இப்போதைக்கு இல்லை. ஆனால் காதலர் தினத்துக்கு எப்படியாவது வந்து விடுவேன் என்று சொல்லி இருக்கிறாள். இந்த முறை தீபாவும் இருக்கிறாள் . ஒரே கொண்டாட்டம்தான் என்றாள் அனன்யா. அனன்யா உன் மனசுல எனக்கு இப்பவும் அதே இடம் இருக்கா? சுபா , தீபா வந்ததுக்கு அப்புறம் ஏதாவது change இருக்கா . அதெல்லாம் மாறாது .அதெல்லாம் சீக்ரட் என்றாள்.

சுபாவிடம் காதலர் தினத்துக்கு என்ன வேண்டும் என கேட்டான் விஷால். அப்புறம் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டாள்.தீபாவிடமும் இதே கேள்வியை கேட்டான். நான்தான் உனக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்க போறேன் என்றாள். அனன்யா அதெல்லாம் முன்னாடி எனக்கு பெருசா தெரிஞ்சுது இப்போ அதெல்லாம் பெருசா தெரியல சீக்கிரம் படிப்பு முடிஞ்சு உன் கூட வாழனும் என்றாள்.இந்த வாரம் ஸ்பெஷல் கிளாஸ் இருந்தது . அனன்யா நான் வரவில்லை என்று சொல்லிவிட்டாள். ரேணுகா டீச்சர் இவனை கூப்பிட்டாள். விஷால் இப்போ மூணு பேரை லவ் பன்றியாமே உண்மையா என கேட்டாள்.இவன் ஒன்றும் சொல்லவில்லை. நான் வரேன் மேடம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டான்.

காதலர் தினத்துக்கு இன்னும் 10 நாட்களே இருந்தன.தீபாவிடம் என்ன சர்ப்ரைஸ் என்று கேட்டான். அதெல்லாம் சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டாள் . படிப்பில் முன்னைக்கு இப்போது பரவாயில்லை என்றாலும் அனன்யா அளவுக்கு இவனால் மார்க் வாங்க முடியவில்லை.
எப்போது படிக்கிறாள் என்பதே தெரியாமல் படிக்கிறாள்.அனன்யா இவனுக்கு ஃபோன் செய்தாள். தீபா வீட்டுக்கு வாயேன் என்றாள். தீபா வெளியே எங்கோ போயிருந்தாள். என்ன விஷயம் சுபாவுக்கு லீவு கன்பர்ம் ஆயிடுச்சு 3 நாள் . நாம இங்கே இருந்தா நிம்மதியா கொண்டாட முடியாது . என்ன பண்ணலாம் ? தீபா என்ன சொல்லுறா .. அவ எல்லாத்துக்கும் ரெடி . நான் யோசிச்சு சொல்லுறேன். அதிக டைம் இல்லை . இப்பயே எல்லா இடமும் புக் ஆகி விட்டது என்றாள்.

சுபாவிடம் கேட்ட போது ஊட்டி போகலாம் என்று சொன்னாள். தெரிந்த ஃப்ரெண்ட் வீடு இருக்கிறது என்று சொன்னாள்.அதையே கன்பர்ம் பண்ணலாம் என்று விஷால் சொன்னான்.என்ன தீபா நீ என்ன சொல்லுற ? நீ என்ன சொல்லுறியோ அதுதான் . அனன்யா இரண்டு நாளில் அந்த சந்தோஷமான செய்தியை சொன்னாள். ஊட்டி புரோகிராம் கன்பர்ம்.சுபா ஹாஸ்டல் இருந்து நேராக ஊட்டி வருகிறாள் . இவர்கள் இங்கிருந்து டிரைன் மூலமாக ஊட்டி போவதாக திட்டம்.விஷால் டிராவல் பண்ண என்னென்ன வேணுமோ எல்லாம் வாங்கிக்க . நான் அப்பாகிட்ட பேசிட்டேன் . அவர் ஓகே சொல்லிட்டாரு . டிரைன் டிக்கெட் புக் பண்ணிவிட்டேன் என்றாள்.
விஷால் ஃபோன் பண்ணி இருந்தாள் அனன்யா .இன்னும் 3 நாள் தான் இருக்கு என்றாள்.இவன் ஓரளவு ஷாப்பிங் முடித்து இருந்தான்.அனன்யா எந்த பிரச்சனை வந்தாலும் நான்தான் பொறுப்பு அதான் கொஞ்சம் யோசிக்கிறேன். ம்ம் புரியுது நான் இன்னைக்கு தெளிய வைக்கிறேன் நைட்டு தீபா வீட்டுக்கு வந்து விடு என்றாள்.

தீபா ஏதோ படித்து கொண்டிருந்தாள். அனன்யாவும் ஏதோ படித்து கொண்டிருந்தாள். இவனை கவனிக்கவில்லை. சாரி விஷால் என்றாள்.
எல்லா அசைன்மெண்ட் முடிக்கணும் . அதான் கொஞ்சம் பிஸி. ஒரு அரைமணி நேரம் . அதுக்குள்ள எல்லாத்தையும் முடிச்சிட்டு வரேன் என்றாள். அவசரமில்லை என்றான் .அவள் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு வருவதற்குள் தீபா வந்தாள். என்ன தீபா உனக்கும் ஏதாவது அர்ஜண்ட் வொர்க் இருக்கா . அப்படியெல்லாம் இல்லை . கொஞ்சம் தண்ணி கொண்டு வா என்றான். அவள் கீழே போனாள். இவன் அனன்யா பக்கத்தில் போய் அமர்ந்தான். ஒரு 5 மினிட்ஸ் என்றாள். தண்ணி கொண்டு வந்து தந்தாள்.சுபாவும் நானும் எல்லா ஏற்பாடும் பண்ணி விட்டோம். நீ வொர்ரி பண்ண வேண்டிய அவசியமே இல்லை. எப்போதும் போல எங்க கூட இரு என்றாள்.

விஷால், அனன்யா , தீபா மூவரும் கிளம்பி ரயில்வே ஸ்டேஷன் போயினர். அனன்யா எல்லாம் எடுத்துகிட்டாயா தீபா அப்புறம் அதை காணோம் இதை காணோம்னு
சொல்லக்கூடாது . எல்லாம் ஓகே என்றாள் தீபா.ரெண்டு பேரையும் சீட் நம்பர் பார்த்து உட்கார வைத்தாள் அனன்யா.பசிக்குதுன்னா சொல்லு விஷால் ஆப்பிள் கூட பண்ணி தரேன் என்றாள் அனன்யா. அதெல்லாம் பசிக்கலை . டிக்கெட் செக்கிங் முடிந்ததும் இயல்பு நிலைக்கு திரும்பினான் விஷால். சுபாவுக்கு ஃபோன் செய்து கிளம்பி விட்டதாக சொன்னாள் அனன்யா. சுபா இன்றே அங்கு போய் சேர்ந்திருப்பாள். நாளைக்கு காலை 8 மணிக்கு வந்து விடுவோம் என்றாள் அனன்யா.ஸ்டேஷன் இல் சுபாவை பார்த்ததும் தான் விஷால் முகத்தில் சிரிப்பே வந்தது. ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். விஷாலுக்கு ஒரு ரூம் . மற்றவர்களுக்கு ஒரு ரூம் என ஒதுக்கப்பட்டது . விஷால் ரூமை சுற்றி பார்த்தாள் அனன்யா. நல்லா இருக்கு . எல்லோரும் குளித்து விட்டு வாங்க சாப்பிடலாம் என சுபா சொன்னாள் . சுபா பிறகு தேவி என்ற பெண்ணை யும் அவளுடைய ஹஸ்பண்ட் ஆறுமுகத்தையும் அறிமுகபடுத்தினாள் . எல்லோரும் ஊட்டியை சுற்றி பார்க்க கிளம்பினர் .
தேவிக்கு அது சொந்த ஊர் என்பதால் எல்லா இடங்களும் அதனுடைய வழிதடங்களும் நன்றாக தெரிந்தது . அனன்யா விஷாலுக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள் .
பூங்காவிற்கு சென்று போட்டோ எடுத்தார்கள். தீபா இயற்கையை அமைதியாக ரசித்தபடி வந்தாள்.படகு சவாரி போனார்கள்.மதியம் லஞ்ச் சாப்பிட வீட்டுக்கு வந்து விட்டார்கள் . மீண்டும் 4 மணிக்கு போகலாம் என்றார்கள்.போட்டோஸ் எல்லாம் பார்த்து கொண்டு இருந்தாள் அனன்யா. விஷால் எங்கே ? அவன் ரூம்ல .ஃபோன் பண்ணினாள் . எங்க ரூமுக்கு வா என்றாள். அனன்யா ரூமில் போட்டது போட்ட படி கிடந்தது . கொஞ்சம் சோர்வா இருக்கேன் . இங்கேயே படு . தீபா அந்த டேப்லெட் எடுத்து குடு என்றாள். அனன்யா வந்து தொட்டு பார்த்தாள். ஜுரம் எல்லாம் ஒண்ணும் இல்லை. விஷால் தூங்கி விட்டான். அவன் அருகிலேயே படுத்து கொண்டாள் அனன்யா. மணி 4 ஆகி விட்டது போவோமா என கிளம்பினார்கள் எல்லோரும் . இவனையும் எழுப்பி முகம் கழுவ வைத்து கூட்டி போனார்கள்.

இரவு பார்ட்டியில் தீபா விஷாலுக்கு மோதிரம் அணிவித்தாள். சுபா ஒரு டிரஸ் கிப்ட் செய்தாள். அனன்யாவும் மோதிரம் போட்டாள். இவனும் கிப்ட் களை வழங்கினான். அனன்யா பாட, தீபா,விஷால், சுபா மூவரும் ஆடினர். ஒரு மணி அளவில் ரூமுக்கு திரும்பினர் . நீ இங்கேயே இரு விஷால் என்னால் இன்னைக்கும் உன்னை பிரிந்து இருக்க முடியாது என்றாள் சுபா. இவனுக்கு 4 மணி அளவில் விழிப்பு வந்தது. என்ன வேண்டும் விஷால் என்றாள் அனன்யா. தண்ணி வேணும் என்றான் எடுத்து தரேன் என்று எடுத்துக் கொடுத்தாள் . சுபாவும் எழுந்து கொண்டாள். ரொம்ப குளிருது என்றாள். வெளியே வாக் போலாமா என்றான் இந்நேரத்துக்கா கொஞ்ச தூரம் போவோமே என்றான். தீபாவையும் எழுப்பு என்றாள் அனன்யா. எங்க போறோம் என்றாள் தீபா. சும்மா கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாம் என்றாள் சுபா. நால்வரும் வெளியில் இறங்கி நடக்க தொடங்கினர் .
டீ குடிக்கலாமே என்றால் அனன்யா. ஒரு கடையில் நின்று நால்வரும் டீ குடித்தனர் .. நல்லா இருக்குல்ல என்றான் விஷால்.


வாக்கிங் முடிந்து ரூம் வந்ததும் விஷால் ரிசப்ஷன் சோபாவில் உட்கார்ந்து விட்டான். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க நான் கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருக்கிறேன் என்றான் . நீயும் வா என்றாள் தீபா அவன் இருந்து விட்டு வரட்டும் என்றாள் அனன்யா. நான் இவன் கூட இருக்கிறேன் என்றாள் தீபா.
அனன்யா எதுவும் சொல்லவில்லை.சுற்றிலும் தோட்டம் இருந்தது நடக்க பாதை இருந்தது. நாம garden சுற்றி பார்த்துவிட்டு வருவோமா. என்றான் விஷால். சரி போவோம் . தீபா நல்லா குளுருது என்றாள். இன்னொரு டீ குடிக்கிறியா என்றான். வேண்டாம் விஷால்.. ஏதாவது ஒன்று சொல்லு ஏன் பேசாம வர? உன் கூட இருக்கிறதே போதும் விஷால் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவளை இறுக அணைத்து உதட்டில் முத்தமிட்டான்.அவள் ரூமுக்கு போய்விடலாம் என்றாள்.அவனுடைய ரூமுக்கு சென்றார்கள். தீபாவை படுக்க வைத்து உதட்டில், கன்னத்தில் முத்தமிட்டான் அவள் துப்பட்டாவை விலக்கி இங்கே முத்தம் குடு விஷால் என்றாள்.அவளை தூக்கி வைத்து அவளுடைய பின்புறங்களை தடவினான். விஷால்,விஷால் என முனகினாள் தீபா.அவளுடைய கழுத்தில் முத்தமிட்டான். அவள் அவனை இறுக்க அணைத்தாள்.

ரூமுக்கு வந்த போது அனன்யாவும் சுபாவும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். எங்க போனீங்க இங்கதான் தோட்டத்தை சுத்தி பார்த்தோம். சும்மா சுத்தி பாத்தீங்களா..இல்ல நான் தீபாவ சுத்தி பார்த்தேன் இரண்டு பேரும் சிரித்தார்கள் . காபி வேணும் அனன்யா என்றான் . காபி வரவழைத்தாள்.
காலை எட்டு மணிக்கு எல்லோரும் குளித்து தயாரானார்கள். அப்போது தேவி வந்து அன்று பார்க்கப் போகிற இடங்களை பற்றி சொன்னாள்.எல்லோரும் டிபன் சாப்பிட்டுவிட்டு கிளம்பினார்கள். ஊட்டி குளிர் ஊசி துளைப்பது போல் இருந்தது. சுபாவும் அனன்யாவும் சந்தோஷமாக இருந்தனர். தீபா இவன் ரசிப்பதை பார்த்துக் கொண்டு வந்தாள்.
வழியில் மலர்களைப் பறித்துக் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்தான். அனன்யா அதை ஆசையோடு தலையில் வைத்துக் கொண்டாள். ரோஸ் கிடைக்குமா விஷால் என்றாள். நான் போய் வாங்கி வருகிறேன் என்றான் நானும் வரேன் என்றாள் சுபா. இருவரும் ஃபிளவர் ஷாப்பை தேடி போய்க் கொண்டிருந்தார்கள்.ரோஸ் வாங்கி சுபா தலையில் வைத்து விட்டான். மற்றவர்களுக்கும் கொடு என்றான். தீபா நீ எனக்கும் வைத்து விடு என்றாள். அவன் தீபாவிற்கும் அனன்யாவுக்கும் வைத்து விட்டான்.

மதியம் லஞ்சுக்கு வீடு வந்து விட்டார்கள். சுபா சற்று சோர்வாக இருந்தாள். என்ன ஆச்சு என்றான். ஒன்னும் இல்லை லேசா டயர்டா இருக்குது சரி இங்கே வா என்று கூப்பிட்டான். அவளுடைய கை கால்களை தேய்த்து விட்டான். இப்ப எப்படி இருக்குது பரவாயில்லை என்றாள் . அவளை இழுத்து பிடித்து கன்னத்தில் முத்தமிட்டான். அனன்யாவும், தீபாவும் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.சுபாவை கட்டிக்கொண்டு அவள் மார்பில் முகம் புதைத்தான்.

லஞ்ச் முடிஞ்சதும் எல்லோரும் ஒரு குட்டி தூக்கம் போட்டனர். விஷால் அனன்யாவை பார்த்தான். .என்ன விஷால்? பசிக்குது என்றான் . அவள் பையில் இருந்த ஸ்னாக்ஸை கொண்டு வந்து கொடுத்தாள். விஷால் அனன்யாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.என்ன விஷால்? ரொம்ப குளிருது . சரி வா போர்வைக்குள் என்று சேர்த்து அணைத்துக்கொண்டாள். அவள் மார்பின் வெப்பம் குளிருக்கு இதமாக இருந்தது . அனன்யா இப்போ பரவாயில்லையா என்றாள். இப்போ ஓகே என்றான்.விஷால் இன்னும் என்ன தயக்கம் என்றாள் அனன்யா. சுபா வந்து விஷாலை இன்னொருபுறம் கட்டிக்கொண்டாள்.அவளுடைய மார்புகள் அவனுடைய முதுகில் பதிந்தன. இருவருக்கும் உதட்டில் முத்தம் கொடுத்தான்.சுபா இன்னும் இறுக்கமாக கட்டிபிடித்து கொண்டாள்.அவள் மூச்சு பட்டு இவன் கழுத்து பகுதி இன்னும் சூடாகியது . அனன்யா விஷால் ஐ லவ் யு டா என்றாள். சுபா அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். சுபாவின் பின்புறத்தையும், அனன்யாவின் பின்புறத்தையும் விஷாலின் கைகள் அழுத்தி பிடித்திருந்தன.