Oru Devathai Paarkkum Neram Ithu - 8 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 8

Featured Books
Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 8

புதிய உடையில் அனன்யாவும், சுபாவும் காலையிலேயே இவன் வீட்டுக்கு வந்து விட்டனர் ஹாப்பி தீபாவளி விஷால் என்று சொன்னார்கள். ஹேப்பி தீபாவளி அனன்யா ஹாப்பி தீபாவளி சுபா என்ன காலையிலேயே வந்துட்டீங்க வீட்ல வேலை எதுவும் இல்லையா ..எங்களுக்கு இதுதான் முழுநேர வேலையே என்று சிரித்தார்கள். உட்காருங்கள் நான் போய் ஸ்னாக்ஸ் எடுத்துட்டு வரேன். அதெல்லாம் ஒன்னும் வேணாம் நாம இப்போ கோயிலுக்கு போறோம். இருங்க குளிச்சிட்டு வரேன் உட்காருங்க என்றான் சரி வெயிட் பண்றோம் சீக்கிரம் வா என்றாள் அனன்யா.பக்கத்தில் இருந்த முருகன் கோயிலுக்கு மூவரும் போயினர் சுவாமி உன்ன மாதிரி என்னையும் இரண்டு பொண்டாட்டிகாரனாக்கு..என வேண்டிக் கொண்டான். அனன்யா முதலில் எங்க வீட்டுக்கு தான் போகணும் அப்பா வெயிட் பண்ணிட்டு இருப்பார் என்றாள் . அதுவும் சரிதான் என்றாள் சுபா.அனன்யா வீட்டுக்கு போனபோது அவள் அப்பா வா சுபா, வா தம்பி என இருவரையும் வரவேற்றார்.

நான் கொஞ்சம் வெளியே போறேன், நீங்க பேசிட்டு இருங்க தம்பி என்றார் அனன்யாவின் அப்பா. ஏதாவது வாங்கணுமா அங்கிள் நான் போறேன் என்றான் விஷால். அதெல்லாம் ஒன்னும் இல்லை ஒரு பிரண்டை பாக்க போறேன் என்றார். சரி அங்கிள். அனன்யா போய் ஒரு தட்டு நிறைய பலகாரம் எடுத்துக் கொண்டு வந்தாள். எடுத்துக்க விஷால் டிபன் பண்ணி இருக்கேன் சாப்பிடலாம் கொஞ்ச நேரத்துல. நீ முதல்ல உட்காரு அனன்யா எங்க அந்த சாரி அதுல உன்னை பார்க்கலாம் என்று நினைத்தேன் என்று சொன்னான் விஷால் இது வேறயா என்று சிரித்தாள் சுபா. ஒரு நிமிஷம் இரு நான் போய் மாற்றிக் கொண்டு வருகிறேன் என்று சொன்னாள் . போய் மாற்றி கொண்டு வந்து விட்டாள் எப்படி இருக்கேன் சுபா என்று கேட்டாள்? தேவதை மாதிரி இருக்கு என்று சொன்னான் விஷால் .அப்ப நான் நீயும் ஒரு தேவதை சுடிதார் போட்ட தேவதை தான். ஐஸ் வச்சது போதும் தீபாவளி கிப்ட் எங்கே என்று கேட்டாள் சுபா.

அனன்யா சரி கிப்ட் பார்த்தது போதும் இரண்டு பேரும் சாப்பிட வாங்க என்று அழைத்தாள். கொஞ்சம் பொறு அனன்யா அங்கிள் வந்துவிடட்டும் அங்கிள் இப்ப வர மாட்டார் அவர் சாப்பிட போயிருக்காரு ஓ அப்படியா என்றான் விஷால். விஷால் சுபாவுக்கும் அனன்யாவுக்கும் ஊட்டி விட்டான். ஹாப்பி தீபாவளி ஒன்ஸ் அகைன் என்று சொன்னான். வெறும் வாழ்த்து தானா பாட்டு இல்லையா டேன்ஸ் இல்லையா என்று கேட்டான் விஷால்
அனன்யா நீ தான் ஒரு பாட்டு பாடேன் என்று கேட்டான் விஷால். அவள் பாடி முடித்ததும் இருவரும் கைதட்டினர் சூப்பர் அனன்யா இதுக்காகவே நாம மூணு பிள்ளை பெத்துக்கணும் என்றான் விஷால். போதுமா என்றாள் சுபா

விஷால் வெளியே மகிழ்ச்சியாய் இருந்தாலும் உள்ளுக்குள்ளே இரண்டு பெண்களின் மனதிலும் நிரந்தரமாக இருக்க முடியுமா என்று கவலையோடு இருந்தான். அனன்யா நாம இப்ப சுபா வீட்டுக்கு போவோமா என்று கேட்டாள்.
சரி போவோம் என்றான் . நான் முன்னாடி போய் அரேஞ்ச்மெண்ட்ஸ் பண்றேன் நான் போன் பண்ணதுக்கு அப்புறம் வாங்க என்றாள் சுபா. ஏன் என்னாச்சு சுபா என்னவோ எல்லாத்தையும் போட்டபடி போட்டு விட்டு வந்து விட்டேன் நீங்க ரெண்டு பேரும் வர்றப்ப எல்லாம் சரியா இருக்கணும் இல்ல லஞ்சுக்கு வந்துருங்க ரெண்டு பேரும் என்றாள் சுபா.

நிஜமாக இந்த சேரில நான் தேவதை மாதிரி இருக்கேனா என்று கேட்டாள் அனன்யா. ஏன் இந்த சந்தேகம்.. சரி டிவி பார்ப்போமா என்று சோபாவில் அமர்ந்தான் விஷால் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் அனன்யா இதுக்கு தான் சுபா விட்டுட்டு போனாளா.. அனன்யா நான் எங்க உட்காருவது என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் பிறகு அவளே அவன் மடி மேல் உட்கார்ந்தாள் இப்ப இந்த சாரி அவசியமா ரொம்ப இடைஞ்சலா இருக்கே என்றான் விஷால் ஆமா இல்ல என்றாள் அனன்யா . என்ன அனன்யா அமைதி ஆயிட்ட என்னவோ வெக்கமா வருது ஆஹா இது என்ன புது பழக்கம் என்றான் விஷால் நான் வேணும்னா போய் சாரி மாத்திட்டு வரவா.. சரி நானும் வரவா? எதுக்கு ஹெல்ப் பண்ண தான்... அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் அப்போ மூணு பிள்ளை? அது அப்ப பாத்துக்கலாம்


அனன்யா சேரியிலிருந்து சுடிதாருக்கு மாறி விட்டாள். வாவ் எந்த ட்ரெஸ்ல பார்த்தாலும் ரொம்ப அழகா இருக்கு ?என்னது என்று கேட்டாள் அது சொல்ல கூடாது என்றான் விஷால். கொஞ்சுனது போதும் போலாமா subaa வீட்டுக்கு. இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள போலாமா ன்னு சொன்னா எப்படி நீ எப்ப ஆரம்பிச்சு எப்ப முடிப்ப ? அப்படி எல்லாம் சொல்ல முடியாது.அவளை இழுத்துப் பிடித்து மென்மையாக இடுப்பை தடவினான். இதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா? வேறு எங்கே தடவனும் போதும் இன்னைக்கு ஒன்னும் நமக்கு ஃபர்ஸ்ட் நைட் இல்லை அது சரி கையை எடு சரி நீ கொடுத்து வச்சது அவ்வளவுதான் என்றான் விஷால். எனக்கும் ஆசை தான் விஷால் ஆனா பயமா இருக்கு நம்ம ஒரு நிலைக்கு போற வரைக்கும் கண்ட்ரோல்ல இருக்கிறது தான் நல்லது.. நான் சும்மா சொன்னேன் பா. உன் விருப்பம் இல்லாம நான் ஒன்னும் செய்ய மாட்டேன் .

சுபாவே போன் செய்து விட்டாள்.. சீக்கிரம் வாங்க என்றாள் . அனன்யாவை டூவீலரில் ஏற்றிக்கொண்டு சுபா வீட்டுக்கு விரைந்தான் விஷால். வாங்க உங்களுக்காக தான் வெயிட்டிங் என்றாள் சுபா. அதுக்குள்ள சாரி மாத்திட்டியா இவன்தான் வேணாம்னு சொன்னான். நல்லா தானே இருந்தது சரி வாங்க உட்காருங்க கூல்டிரிங்ஸ் சாப்பிடுங்க என்று சொன்னாள் சுபா. அம்மா எங்கே காணோம்? அவங்க கோவிலுக்கு போய் இருக்காங்க இப்ப வந்துருவாங்க சரி நம்ம மாடிக்கு போலாமா என்றான் விஷால். கொஞ்ச நேரம் இரு விஷால் போலாம் .என்ன நடந்துச்சு அனன்யா ஒரு மாதிரி இருக்கா ஒன்னும் நடக்கல அதான் ஒரு மாதிரி இருக்கா என்றான் விஷால்.. இவனுக்கு வேற வேலை இல்ல நீ ஒன்னும் நெனச்சுக்காதே... நாளைக்கு நைட்டு நான் ஊருக்கு போறேன். உங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன் மறுபடியும் பொங்கலுக்கு தான் உங்களை எல்லாம் பார்க்க முடியும் என்றாள் சுபா சோகமாக.

சற்று நேரத்தில் சுபாவின் அம்மா வந்துவிட்டார் வாங்க தம்பி, வா அனன்யா என்றாள் . தம்பி கூல் ட்ரிங்க்ஸ் குடிச்சியா, குடிச்சேன் ஆன்ட்டி.. என்ன பிரச்சனை உங்க இரண்டு பேருக்குள்ள என்றாள் சுபா நான் அவ கைய புடிச்சி இழுத்திட்டனாம் . கர்ப்பம் ஆகிவிட்டேன் பாரு என்று சிரித்தாள் அனன்யா. சும்மா பண்றிங்களா வேற வேலை இல்ல உங்க ரெண்டு பேருக்கும். நாளைக்கு என்னை ட்ரெயின் ஏத்தி விட வருவீங்க இல்ல கண்டிப்பா வருவோம் நீ எதுக்கு இப்பவே அதை பத்தி கவலைப்படுகிறாய் அப்படி ஒன்னும் இல்ல விஷால் எங்கிட்ட சரியாக பேசவில்லை ஓ இது வேறயா.. நான் சீரியஸா சொல்லிக்கிட்டு இருக்கேன் எவ்வளவு பேசினாலும் பத்தாது இவளுக்கு என்றான் விஷால்.

ஈவினிங் மூவி போவோமா என்று கேட்டால் அனன்யா அப்ப நீ எல்லாத்துக்கும் ரெடியா எப்ப பாரு அதே நினைப்பு ... நான் வரல நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க என்றாள் சுபா ஏன் என்ன ஆச்சு கொஞ்சம் வேலை இருக்கு பேக் பண்ணனும் அப்ப சரி அனன்யா நாலு மணிக்கு ரெடியா இரு நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன் என்றான் விஷால். நான் அப்பா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கிறேன் சரி கேளு நீயும் வந்தா நல்லா இருக்கும் சுபா. எனக்கும் ஆசைதான், ஆனா பேக் பண்ணனுமே .சரி நாலு மணிக்கு ரெடியா இருப்பேன்.

அனன்யாவுடன் முதன் முதலில் சினிமாவுக்கு போவது எண்ணி மகிழ்ந்தான் விஷால் ஆனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் அவள் எந்த நேரத்தில் என்ன சொல்வாளோ என்று யோசித்தான். அனன்யா இயல்பாக இருந்தாள். காலையில் இருந்த கோபம் போய்விட்டதா என்று கேட்டான். கோபம் இல்லை அது உன் மேல நான் வைத்திருந்த காதல் அது என்று சொன்னாள் அனன்யா .என்கிட்ட பர்மிஷன் எல்லாம் கேட்காதே எனக்கு கஷ்டமா இருக்கு நீ எனக்கு முக்கியம் உன்னோட சந்தோசம் தான் எனக்கு முக்கியம் என்றாள் அனன்யா

படம் அத்தனை இன்ட்ரஸ்டிங்கா இல்லை என்று அனன்யா சொன்னாள் . நீ இன்ட்ரஸ்டிங்கா இருக்கியே என்று விஷால் சொன்னாள். நான் படம் பார்க்க வரவில்லை உன்னை பார்க்கத்தான் வந்தேன். சரி வா போவோம் , ஏதாவது ரெஸ்டாரண்டுக்கு போவோம்.சுபா போன் பண்ணி இருந்தாள் படம் எப்படி எங்க நாங்க படத்தை பார்த்தோம்.. ஓ அப்படியா என்று சிரித்தாள் .
நான் உங்க வீட்டுக்கு தான் வந்து இருக்கேன் சரி வாங்க என்றாள் . என்னடி ஆச்சு படம் சரியான போர்.. அதான் வந்துட்டோம் சரி கொஞ்சம் வேலை இருக்கு நாளைக்கு மீட் பண்றேன் என்றான் விஷால்.

மறுநாள் காலேஜுக்கு வந்த அனன்யாவிடம் என்ன ஆச்சு என்று கேட்டான் சும்மா தான் பேசிகிட்டு இருந்தோம். ஒன்னும் முக்கியமான விஷயம் எதுவும் இல்லை. சரி அனன்யா சாயங்காலம் இங்கிருந்து நேரா ஸ்டேஷனுக்கு போயிடுவோம் அவள சென்ட் ஆப் பண்ண என்றான் விஷால். சரி விஷால்.சுபாவை அனுப்பி வைக்க அம்மா மட்டும் வந்திருந்தார். அவர் அனன்யாவோடு பேசிக் கொண்டிருந்தார். விஷால் சுபாவுக்கான வாட்டர் பாட்டில் ,பிஸ்கட் போன்றவற்றை வாங்கி வந்திருந்தான். விஷால் அனன்யாவை பத்திரமா பாத்துக்கோ, நல்லா படி, நான் போன் பண்றேன் என்றாள் சுபா.

அனன்யாவை வீட்டில் விட்டான் ஒரு நிமிஷம் உள்ள வந்துட்டு போயேன் என்றாள் . கொஞ்சம் இரு டிரஸ் மாத்திட்டு வரேன் என உள்ளே போனாள். என்ன விஷயம் அனன்யா அவங்க அம்மா ஏதாவது சொன்னாங்களா ஆமா அவங்க அப்பா சுபாவுக்கு தெரியாம அலையன்ஸ் பார்க்கிறாராம் . படிப்பு முடிஞ்ச உடனே கல்யாணம் பண்ண முடிவு பண்ணி இருக்காங்க .. இது சுபாவுக்கு தெரியாது. நாம ஏதாவது செய்யணும் விஷால் அவளால இது தாங்கவே முடியாது. எனக்கு கொஞ்சம் டைம் கொடு அனன்யா நான் யோசிச்சு சொல்றேன்.

விஷால் நானும், அவளும் உன்ன நம்பி தான் இருக்கிறோம் உன் முடிவை நம்பி தான் இருப்போம் என்றாள் அனன்யா. நீ கவலைப்படாதே எல்லாம் சரியாயிடும். ஏதாவது சாப்பிட்டு போ விஷால். ஒன்னும் வேண்டாம் கொஞ்சம் தண்ணி கொடு.. விஷால் தூங்காமல் சுபா பற்றியே யோசித்தான்.எப்படி சுபாவின் அப்பாவை convince செய்வது என்று புரியாமல் தவித்தான் .சுபா சொன்ன மாதிரி எங்காவது ஓடிப் போய் விடலாமா என்று கூட யோசித்தான் .எப்படி பார்த்தாலும் ஓடிப் போவது கோழைத்தனம் என்ற முடிவுக்கு வந்தான். எப்படியாவது படிப்பை முடித்தவுடன் ஒரு வேலைக்கு போவது அதோடு சுபாவை பதிவு திருமணம் செய்து கொள்வது என முடிவு எடுத்தான்.
எத்தனை எதிர்ப்பு வந்தாலும் சுபாவை கைவிடக்கூடாது என்று நினைத்தான்.அனன்யாவுக்கு போன் பண்ணி தான் எடுத்திருக்கும் முடிவை சொன்னான் நம்மால் இதை சமாளிக்க முடியுமா விஷால் நிச்சயம் முடியும் அனன்யா
அனன்யாவின் மனமும் குழம்பிப் போயிருந்தது. இவ்வளவு தூரம் ஆகிவிட்ட பிறகு வீட்டில் எழும் பிரச்சனைகளை சமாளித்து தான் ஆக வேண்டும். இன்னும் இரண்டு வாரங்களில் அனன்யாவின் பிறந்தநாள் வருகிறது அப்போது அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தாள் .விஷால் அனன்யாவுக்கு போன் செய்தான் உன்னுடைய பர்த்டே வருகிறதே என்ன கிப்ட் வேண்டும் என்றான். அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நான் அப்பாவிடம் பர்த்டே தினத்தன்று நம்முடைய விஷயத்தை பற்றி பேசலாம் என்று இருக்கிறேன் அதெல்லாம் வேண்டாம் அனன்யா அவரும் உன்னை வேறு காலேஜுக்கு மாற்றி விட்டால், அதெல்லாம் வேண்டாம் .என்னை என்ன செய்ய சொல்கிறாய் விஷால்? ஒரு பக்கம் நீ, மறுபக்கம் சுபா நம் மூவரோட வாழ்க்கை பிரச்சினை பேசித்தான் ஆக வேண்டும்.