Oru Devathai Paarkkum Neram Ithu - 5 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 5

Featured Books
Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 5

ஒரு கணம் அவனால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லை. சுபாவும் தன்னை விரும்புகிறாள் என்பதை உணரவே சற்று நேரம் பிடித்தது. அவளுடைய அணைப்பில் இருந்து மென்மையாக விடுவித்துக் கொண்டான். என்னாச்சு சுபா உனக்கு என்றான் விஷால். நான் நிஜமாகத்தான் சொல்கிறேன் நான் உன்னை விரும்புகிறேன் என்றாள் சுபா. அனன்யா என்ன சொல்வாளோ என யோசித்துக் கொண்டிருக்கும் போது அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். என்ன அனன்யா சிரிக்கிற என்றான் விஷால். எதுக்கு நீ பயப்படுற விஷால் என்னிடம் அவ முன்னாடியே சொல்லிட்டா என்னால அதை மறுக்க முடியல எங்க ரெண்டு பேரையும் நீ ஏத்துக்க தான் வேணும். என்ன அனன்யா சொல்ற இது யாராவது கேள்விப்பட்டால் உங்கள தான் தப்பா நினைப்பாங்க .நினைச்சுட்டு போகட்டும்.சுபா நீ மறுபடி யோசிச்சிட்டு சொல்லு. நானும் அனன்யாவும் நல்லா யோசிச்சுட்டு தான் இந்த முடிவு எடுத்திருக்கிறோம் நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நான் உன் கூடத்தான் இருப்பேன் இதை யார் நெனச்சாலும் தடுக்க முடியாது. இது வாழ்க்கை பிரச்சனை சுபா நாளைக்கு நீ வருத்தப்படுற மாதிரி எதுவும் நடக்க கூடாது என்றான் விஷால். அனன்யா நடந்தது நடந்து போச்சு நாம இப்போ போலாமா என்றாள் . சுபா இவனுடைய கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள் அவனுடைய மனம் திசையறியாமல் தடுமாறியது.

இரண்டு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். ஒரு கையை சுபாவும் மறு கையை அனன்யாவும் பிடித்துக் கொண்டனர். அவர்கள் ஏதோ சாதித்து விட்டது போல் மகிழ்ச்சியாக இருந்தனர். இப்ப நான் என்ன செய்யணும் என்று கேட்டான் விஷால் ஒன்னும் செய்ய வேண்டாம் நாங்களே எல்லாத்தையும் பாத்துக்குறோம் என்று கூறினார்கள் அனன்யாவும், சுபாவும்.அனன்யா எப்படி இதற்கு ஒத்துக்கொண்டாள் என்பது புதிராக இருந்தது அடுத்த நாள் நைட் ஸ்டடி என்பது முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது இருவருமே அவனை விட்டு ஒரு நொடி கூட பிரியாமல் இருந்தனர். இந்த முறை அனன்யாவே கீழே போய் காபி போட்டு எடுத்து வந்தாள் சுபா விஷாலை நெருங்கி வந்தாள். நீ ஒன்னும் தடுமாற வேண்டாம், உன் மனசுல நான் இருக்கிறேன் என்று எனக்கு தெரியும் அது தானா நீயா சொல்லும் போது நமக்குள்ள எல்லாமே நடக்கும் என்றால் சுபா அதுவரைக்கும் நான் வெயிட் பண்ணுவேன் எனக்கு அவசரம் எல்லாம் இல்லை. ஆனா நீ விலகி போக ட்ரை பண்ணாத அது என்னால தாங்க முடியாது.

மேற்கொண்டு என்ன செய்வது என்று விஷாலுக்கு புரியவில்லை எப்படியும் சுபா அவனை புரிந்து கொள்வாள் என்று நினைத்தான் காலேஜிலும் சுபா எப்பவும் போல அதே அன்போடு இருந்தாள் . இவனுக்கு அவளை அனன்யாவிடம் இருந்து பிரித்துப் பார்க்க ஒரு விஷயம் கூட இல்லை. இதுவருமே சரிசமமான அன்பை இவன் மேல் வைத்திருந்தார்கள் மதியம் லஞ்ச் மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்

அன்று ஏதோ காரணத்தால் அனன்யா வரவில்லை. சுபாவை தனியாய் விட விஷாலுக்கு மனம் இல்லை ஏதோ யோசித்துக் கொண்டு சுபா வீட்டுக்கு போனான் எங்க நீ வரமாட்டியோ என்று தவித்துக் கொண்டிருந்தேன் என்றாள் சுபா. அதான் வந்துட்டேனே என்றான் விஷால் இருவரும் அன்றைய தினம் காலேஜில் நடந்த சம்பவங்களை சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள். சரி சுபா ரொம்ப நேரம் ஆகிவிட்டது நான் வீட்டுக்கு போகிறேன் என்றான் விஷால். அதுக்குள்ளயா என்றாள் சுபா. போய்தான் ஆகவேண்டும் .அப்போ ஏதாவது கொடுத்துட்டு போலாம் இல்ல என்றாள் சுபா. அவளை நெருங்கினான் அவன் மனம் சுபாவுக்காக, தனக்காக ஏங்கும் சுபாவுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று துடித்தது அவள் அருகில் போய் ஐ லவ் யூ சுபா என்றான் அதற்கு மேல் சொல்வதற்கு அவனிடத்தில் வார்த்தைகள் இல்லை. அவள் கண்கள் கலங்கி நின்றாள் தேங்க்ஸ் விஷால். அவளை அணைத்து மென்மையாக அவளுடைய உதட்டில் முத்தமிட்டான்.

இப்போது விஷால் உடைய பொறுப்பு இரண்டு மடங்கு ஆகிவிட்டது. இரண்டு பெண்கள் ஒரே காதல் என்பதெல்லாம் கனவிலும் விஷால் நினைத்துப் பார்த்ததில்லை. அனன்யா எப்போதும் போல் இருந்தாலும் அவள் என்ன நினைக்கிறாள் என்பதை இன்னும் முழுமையாக இவனிடத்தில் சொல்லவில்லை. அனன்யாவுக்கு பெருந்தன்மை அதிகம். அனன்யாவிடம் இது பற்றி பேச வேண்டும் என நினைத்தான். அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்தது.. அன்று இரவு அனன்யாவுக்கு போன் செய்தான் என்ன அனன்யா உன் மனசுல என்ன இருக்கு நீ சொன்னாதானே தெரியும் என்றான் விஷால். என் மனசுல எதுவும் இல்ல நீ கடைசி வரைக்கும் மாறாம இருந்தா போதும் என்றாள் அனன்யா. அவ்வளவுதானா? வேற என்ன சொல்ல சொல்ற விஷால் நீ எனக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சுபாவும் முக்கியம் எனக்கு நீ என்ன செஞ்சியோ செய்யப் போறியோ அதை சுபாவுக்கு செஞ்சா போதும் அதே அளவு அன்பு செலுத்துனா போதும் வேற ஒன்னும் எதிர்பார்க்கவில்லை..என்றாள் அனன்யா . விஷால் இப்போது சற்று தெளிவானவனாக இருந்தான். இந்த காதலின் முடிவு எப்படி இருக்குமோ என்பது பற்றி அவன் யோசிக்கவும் இல்லை. அதனால் எந்த பயனும் இல்லை.

இம்முறையும் ஹெச் ஓ டி கூப்பிட்டு அனுப்பினார். என்னப்பா இது ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டேன் இப்போ இன்னொரு பொண்ணு வாழ்க்கையும் சேர்த்து வீணாக்குற என்றார். அப்படி நானோ அவங்களோ நினைக்கலை . பார்க்குறவங்க பார்வை பொறுத்தது எங்க காதல்.என்னவோ அந்த பொண்ணுங்களுக்கு எது நடந்தாலும் நீதான் பொறுப்பு என்றார்.இதையெல்லாம் நினைத்து படிப்புல கோட்டை விட்டு விடாதே. சரி சார். அப்படி உன்கிட்டே ஒண்ணும் தனி திறமை எதுவும் இல்லையே அப்படி இருந்தும் , அதான் சார் எனக்கும் புரியல என்றான் சிரித்து கொண்டே. சுபாவும், அனன்யாவும் ஹெச் ஓ டி என்ன சொன்னார் என ஆவலுடன் கேட்டனர். நான் உங்க வாழ்க்கைய spoil பண்ணிட கூடாதுன்னு சொன்னார்.ஓ அவ்வளவுதானா ஒரு வாரத்துக்கு suspend எல்லாம் பண்ணலியா என்றாள் சுபா .
மம் இவளுக்கு ஆசையை பாரு என்றாள் அனன்யா. பிரதீப் ஃபோன் பண்ணியிருந்தான் உன்னை அடிச்சும் நீ திருந்தலை இல்லை .. இப்ப சுபா வேற வாழ்த்துக்கள்.
பிரதீப் அவங்க ரெண்டு பேரும் என்னோட பெஸ்ட் ஃபிரண்ட்ஸ் அதோட காதல் , அது அவங்களோட விருப்பம் . நான் போய் யாரையும் கட்டாயபடுத்தலை .பிரதீப் போனை வைத்து விட்டான்.

அடுத்த வாரம் சுபாவின் பிறந்த நாள் வந்தது. அவளுடைய பிறந்த நாளுக்கு சிறந்த பரிசை தர வேண்டுமென அனன்யாவும் விஷாலும் பேசி கொண்டனர். எங்கேயாவது வெளியே போகலாம் என்றும் முடிவு செய்தனர்.விஷால் அவளுக்கு பிடித்த பாட்டு ஒன்றின் டான்ஸ் பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தான். சுபாவோ எதுக்கு அதெல்லாம், சிம்பிள் ஆக celebrate பண்ணலாம் . அப்புறம் நம்ம கல்யாணத்துல பாத்துக்கலாம் . இதை கேட்டதும் அனன்யா வாயடைத்து போனாள். இவ என்ன இவ்ளோ அட்வான்ஸ் ஆக இருக்கிறாள். விட்டா பொறக்க போற குழந்தைகக்கே டிரஸ் எடுப்பா போல .. என்றாள் அனன்யா . ஏன் உனக்கு அந்த ஆசை இல்லையா என்றான் விஷால். செல்லமாக அவன் முதுகில் குத்தினாள் அனன்யா . அனன்யாவுக்கு ஒரு திட்டம் இருந்தது. ஆனால் சுபாவுக்கு இந்த நிமிஷம் முக்கியம் . விஷால் கூட இருக்கும் ஒவ்வொரு நொடியும் முக்கியம்.சுபாவும், அனன்யாவும் டிரஸ் எடுக்க கிளம்பினர் . இவனையும் ஃபோன் செய்து கூப்பிட்டனர் . நான் எதுக்கு லேடீஸ் டிரஸ் எடுக்க போகும் போது அட சும்மா வாப்பா இல்லேன்னா போர் அடிக்கும் என்றாள் சுபா. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தேடி எடுத்தனர். இவனுக்கும் உடைகள் எடுத்தனர். விஷால் ஜட்டி கிட்டி வேணும்னா சொல்லு என்று கிண்டல் செய்தாள் அனன்யா. இதிலே என்ன தப்பு இருக்கு நீ என்ன வேணுமோ எடுத்துக்க விஷால் என்றாள் சுபா. ஆள விடுங்க.. கேக் ஆர்டர் பண்ணியாச்சா . இனிமேதான் .. சரி போற வழியிலே ஆர்டர் பண்ணி விடுவோம் .

சுபா பிறந்த நாள் விழாவிற்கு அனன்யா அப்பா , சுபா அம்மா , காலேஜ் ஃபிரண்ட்ஸ் கொஞ்சம் பேர் வந்திருந்தனர். இவன் சற்று யோசனையுடனே இருந்தான். என்ன திங்கிங் மறுபடியும் என்றாள் சுபா. ஒருவேளை நாளைக்கு அவங்களுக்கு உண்மை தெரிஞ்சதுன்னா நம்ம காதலை ஏத்துப்பாங்களா ? அதை பத்தி இப்போ கவலை பட வேண்டாம் . சுபாவும் ,விஷாலும் இணைந்து டான்ஸ் ஆடினர். அனன்யா எப்பவும் போல சிறப்பாக பாடி அசத்தினாள். அனன்யா அப்பாவுக்கு ஏதோ அரைகுறையாக தெரிந்திருந்தது . என்ன விஷால் என் பெண்ணை படிக்க விடாம செய்யுறியே இது சரியா ? அப்படியெல்லாம் இல்லை அங்கிள் என்று சமாளித்தான் . சுபா கேக் வெட்டி எல்லோருக்கும் கொடுத்தாள் . விஷாலும் , அனன்யாவும் ஒரு புது மொபைலை சுபாவுக்கு பரிசளித்தனர் . மூவரும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டனர்.அப்போது சுபாவின் அம்மா விஷாலுக்கு ஒரு மோதிரம் அணிவித்தாள் . என் பொண்ணு சந்தோஷமா இருக்கா அதுக்கு காரணமே நீங்க ரெண்டு பேரும்தான் என அனன்யாவையும், விஷாலையும் புகழ்ந்தாள் . எங்கேயும் போக கூடாதென சுபாவின் அம்மா அன்பு கட்டளை இட்டுவிட்டதால் மூவருமே மாடியில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். சுபா அம்மாகிட்ட ஏதாவது சொன்னியா ? இல்லை அவங்களுக்கா ஏதோ தெரிஞ்சிருக்கு .

அன்று இரவு சுபா விஷாலுக்கு ஃபோன் செய்தாள் . ரொம்ப தாங்க்ஸ் விஷால் என்றாள். புது ஃபோன் எப்படி இருக்கு ? சூப்பர் .. விஷால் இந்த நாளை என்னால மறக்கவே முடியாது . நானும் நீயும் டான்ஸ் பண்ண வீடியோ அனன்யா அனுப்பியிருந்தா .நீ பார்த்தியா ? நான் சுமாராதான் ஆடியிருக்கேன் நீ சூப்பர் என்றான் விஷால். சரி சுபா நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு . இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே என்றாள் . நாளைக்கு காலேஜ் போகணும் ல .. சரி விஷால் நான் வைக்கிறேன் .
அனன்யாவும் ஃபோன் செய்தாள் . எனக்கு பொறாமையா இருக்கு .. சுபா உன்னை எப்படி விரும்புறா ? நானும் உன்னை அதே அளவு விரும்புறேன் .. என்றாள் அனன்யா . இதிலே பொறாமை பட என்ன இருக்கு .. உனக்கு தெரியாது இது லேடீஸ் விஷயம் . ஓ அனன்யா நான் ஒண்ணு சொல்லட்டுமா சொல்லு நீ பொறாமை படும் போதுதான் ரொம்ப அழகா தெரியுற .. இதென்ன புது கதை .. என்னவோ எனக்கு பட்டது . நமக்குதான் ஃபர்ஸ்ட் நைட், ஃபர்ஸ்ட் நடக்கணும் என்று சிரித்தவாறே சொன்னாள்.

சுபா மறுநாள் கேசரி கொண்டு வந்து வகுப்பில் விநியோகம் செய்து கொண்டிருந்தாள். இன்னுமா உன் birthday party முடியல என்றான் விஷால் . அதெப்படி முடியும் இப்போதான் ஸ்டார்ட் ஆயிருக்கு என்றாள் சுபா. தன்னுடைய புது போனை எல்லோரிடமும் காட்டி கொண்டிருந்தாள் . இந்த இரண்டு மாதங்களில் என்னென்னவோ நடந்து விட்டது .அனன்யாவுக்கு உடம்பு சரியில்லை என்று கிளாஸ் கடைசி பெஞ்சில் படுத்து விட்டாள்.சுபா அவளுக்கு ஆறுதலாக ஏதோ சொல்லி கொண்டிருந்தாள் .
இன்னைக்கு அப்புறம் ஏன் காலேஜ் வந்தே என்றான் விஷால். சரி வா போவோம் டாக்டர் கிட்டே என்றான் . அதெல்லாம் வேணாம் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாய் விடும் என்றாள்.மறுநாள் அவள் காலேஜ் வரவில்லை .விஷாலும், சுபாவும் அவளை வீட்டில் போய் பார்த்தனர். இப்போது கொஞ்சம் தெம்பாக இருக்கிறேன் .நாளைக்கு காலேஜ் வருவேன் என சொன்னாள் அனன்யா. ஒண்ணும் அவசரமில்லை. நீ உடம்பை பார்த்துக்க மொதல்ல .ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணாதே என்றான் விஷால்.
சுபா என் கூட இரு . சரி சுபா உன் கூடவே இருக்கட்டும் . நான் உனக்கு ஃபோன் பண்ணுகிறேன் என்றான் விஷால் .