இரவுக்கு ஆயிரம் கைகள்

(7)
  • 89.7k
  • 1
  • 31.7k

அப்புதான் முதலில் அந்த சோக செய்தியை சொன்னான் .ரஞ்சனி புருஷன் accident ல இறந்துட்டாப்லயாம் பாவம் என்றான் .இவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. என்னடா சொல்ற எப்போ நடந்தது ஒரு மாசம் ஆச்சாம் நேத்துதான் நியூஸ் கிடைச்சுது. அவ இப்போ எங்க இருக்கா யு எஸ் லிருந்து தஞ்சாவூர் மாறி வந்துட்டாங்க .அவங்க அட்ரஸ் வாட்ஸாப்ப் பண்ணு நான் போயி பார்த்துட்டு வரேன் . நெஸ்ட் வீக் நான் ஊருக்கு வரேன் அப்போ போயி பாக்கலாம் .சரிடா வெக்கிறேன் என்றான்

1

இரவுக்கு ஆயிரம் கைகள் - 1

இரவுக்கு ஆயிரம் கைகள் அப்புதான் முதலில் அந்த சோக செய்தியை சொன்னான் .ரஞ்சனி புருஷன் accident ல இறந்துட்டாப்லயாம் பாவம் என்றான் .இவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. சொல்ற எப்போ நடந்தது ஒரு மாசம் ஆச்சாம் நேத்துதான் நியூஸ் கிடைச்சுது. அவ இப்போ எங்க இருக்கா யு எஸ் லிருந்து தஞ்சாவூர் மாறி வந்துட்டாங்க .அவங்க அட்ரஸ் வாட்ஸாப்ப் பண்ணு நான் போயி பார்த்துட்டு வரேன் . நெஸ்ட் வீக் நான் ஊருக்கு வரேன் அப்போ போயி பாக்கலாம் .சரிடா வெக்கிறேன் என்றான் ரஞ்சனி என்ற உடன் அவள் விட்ட அறைதான் நினைவுக்கு வந்தது . இன்ஜினியரிங் சேர்ந்த புதிதில் first இயர் படிக்கும் போது நடந்த சம்பவம். ரஞ்சனியை எல்லோரும் மாமி என்றே குறிப்பிட்டு வந்தனர்.ஒரு நாள் சாயங்காலம் சீனியர்களிடம் மாட்டிக்கொண்டான் .உங்க கிளாஸ் ல மாமின்னு ஒருத்தி இருக்கலாமே தெரியுமோ நோக்கு என்றான் சார் என்னை விட்டுடுங்க என்று ...Read More

2

இரவுக்கு ஆயிரம் கைகள் - 2

அப்பு இறந்த அதிர்ச்சியில் இருந்து ராகவ் இன்னும் மீளவில்லை .ரஞ்சனி அவனை சமாதானப்படுத்தினாள். அப்புவினுடைய மனைவியிடம் postmortem முடிந்த பிறகு உடல் ஒப்படைக்க பட்டது .ஏராளமான வந்து போயினர் .இவனையும் ரஞ்சனியையும் சேர்த்து பார்த்ததில் ஆச்சர்யம் அடைந்தனர் .அப்புவினுடைய போனை இவன் வாங்கி பார்த்தான் .அது லாக் ஆகி இருந்தது .postmortem ரிப்போர்ட் வர ரெண்டு நாட்களாகும் என்றார்கள் . ரஞ்சனி உனக்கு யாரவது வேண்டாதவங்க இருக்காங்களா நல்லா யோசிச்சு சொல்லு அப்படி யாரும் இல்ல எங்க கல்யாணத்துக்கு கூட பெருசா எந்த எதிர்ப்பும் இல்ல ஷ்யாமுக்கு business எதிரிகள் யாரவது இருந்தார்களா அப்படி யாரும் இல்லை முக்கால்வாசி friends தான் சரி ரஞ்சனி உனக்கு யார் மேலயாவது சந்தேகம் இருந்தா உடனே கால் பண்ணு என்றான் ஓகே ராகவ் நீ எதுக்கும் ஜாக்கிரதையாவே இரு அப்புவின் மனைவி பேசக்கூடிய நிலையில் இல்லை .போலீஸ் ஒரு புறம் விசாரித்ததில் அப்பு ...Read More

3

இரவுக்கு ஆயிரம் கைகள் - 3

டார்லிங் calling என்றே அழைப்பு வந்தது . இவன் இணைப்பை துண்டித்தான். பாஸ் என்ற என்னை துழாவினான் அது ஒரு வேளை சிங்காரம் நம்பர் ஆக வாய்ப்பிருக்கிறது .மெசேஜ்களையும் தேடி பார்த்தான் .கால் ஹிஸ்டரி சுத்தமாக அழிக்கப்பட்டிருந்தது . மறுநாள் பேப்பரில் இது குறித்த விவரங்கள் வந்திருந்தன இறந்தவர் பெயர் சுரேஷ் என்றும் சிங்காரத்தின் நெருங்கிய கையாள் என்பதும் தெரிய வந்தது . சிங்காரம் அலெர்ட் ஆகியிருப்பான் .அவனை கைது செய்ய ஒரே வழி இந்த மொபைல்தான்.மொபைலை போலி முகவரியுடன் கமிஷனர் ஆபீஸ்க்கு அனுப்பினான் தீபு இந்த கேஸ்ல சிங்காரம் அரெஸ்ட் ஆனாதான் எல்லாருக்கும் நல்லது .ஆமா சார் நீங்க அப்பு வீட்டுக்கு போறேன்னு சொன்னீங்களே. இந்நேரம் சிங்காரம் எல்லா இடத்துலயும் ஸ்கெட்ச் போட்டு வெச்சிருப்பான் .அதனால அதிகம் அலட்டிக்க வேண்டாம் அவனே surrender ஆகிற மாறி போலீஸ் பிளான் பண்ணியிருப்பாங்க எண்ணி இரண்டாவது நாள் சிங்காரம் surrender ஆயிட்டான் ...Read More

4

இரவுக்கு ஆயிரம் கைகள் - 4

சிங்காரம் சிறையில் இருந்தபடி கட்டளைகளை பிறப்பித்தபடி இருந்தான். திவ்யாவை கடத்தியவர்கள் கால் செய்தார்கள் . ஈவினிங் 5 மணிக்கு பக்கத்துல இருக்குற ரம்யா பாருக்கு வந்துடு டிஸ்க் குடுத்துட்டு குழந்தையை அழைச்சிட்டு போ .அவர்களுக்கு password குறித்த விவரங்கள் தெரியாது . எனினும் திவ்யாவின் safety கருதி password நீக்கினான்.ஹார்ட்டிஸ்க் ல் லொகேஷன் அறியும் சாப்ட்வேர் ஒன்றையும் இன்ஸ்டால் செய்தான்.அந்த footage இல் இருப்பது ஷியாம் தான் என்பதை ரஞ்சனி உறுதிபடுத்தி இருந்தாள். ஆனால் ஷ்யாமின் சடலமாக தனக்கு காட்டப்பட்டது ஒரு பாதி எரிந்த சடலம் என்றிருந்தாள். இவன் கணக்கு போட்ட மாதிரி ஹார்ட் டிஸ்க் மட்டுமே அவர்கள் நோக்கமாயிருக்காது . ஷியாம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பது கூட இருக்கலாம் . நீ வரும்போது ரஞ்சனியும் அழைத்து கொண்டு வா என்று அடுத்த கால் பண்ணும் போது சொன்னார்கள் . ராம் ஜாமீனில் வந்து விட்டான் .நீங்க ...Read More

5

இரவுக்கு ஆயிரம் கைகள் - 5

மீரா மொத்த பணத்தையும் அவங்க joint அக்கௌண்டுக்கு அதாவது ஷியாம் மீரா அக்கௌண்டுக்கு மாத்தியிருந்தார்கள் .R2 போலீஸ் ஸ்டேஷன்க்கு லேப்டாப் வந்ததும் இன்ஸ்பெக்டர் ரவி சுறுசுறுப்பானான் நிபுணர்களை வரவழைத்து பார்த்ததில் மீராவின் கைரேகை தேவைப்பட்டது .மீராவின் உடல் மார்ச்சுவரியில் இருந்ததால் கைரேகை கலெக்ட் செய்யப்பட்டு லேப்டாப் லொகின் ஆனது .மீரா வெளிநாட்டுக்கு போவதற்க்கு உரிய ஆவணங்கள் இருந்தன . வேறு எதுவும் இல்லை என்பது ஏமாற்றமளித்தது .அவளுடைய சர்ச் ஹிஸ்டரி உள்ளிட்டவையிலும் ஏதுமில்லை. ரவி சிங்காரத்துக்கு போன் செய்து விஷயத்தை சொன்னான் .சே மீரா விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டோமே என சிங்காரம் வருந்தினான் . ராம் அந்த பென் டிரைவ்வில் hidden files இருக்கிறதா என சோதித்தான் இருந்தது. டாட்டா ரெகவரி சாப்ட்வேர் போட்டு அதில் அழிக்கப்பட்ட போட்டோக்களையும் fileகளையும் திரும்ப எடுத்தான் . சிங்காரம் இருந்தான் ஷ்யாமும் இருந்தான் .யு எஸ்சுக்கு மீரா வும் ஷ்யாமும் ட்ரிப் போய் வந்தது ...Read More

6

இரவுக்கு ஆயிரம் கைகள் - 6

ராம் திரும்பி வர இன்னும் ஒரு வாரம் ஆகும் என்ற தகவலை சொன்னாள் தீபு. இன்னும் ஒரு வாரமா அப்போ நான் ஊருக்கு போய்ட்டு வரேன் போயிட்டா எனக்கு போர் அடிக்குமே அதெல்லாம் அடிக்காது நான் போய்ட்டு ராம் சார் வந்த உடனே வந்து விடுகிறேன் என்றான் ராகவ் திவ்யாவும் ரஞ்சனியும் இவன் வருகைக்காக காத்திருந்ததாக சொன்னார்கள் .ஒரு மினி ட்ரிப் போகலாம் என்று பிளான் பண்ணியும் வைத்திருந்தார்கள் . இவனுக்கும் மகிழ்ச்சி தான் .கொடைக்கானல் போவதற்கான எல்லா ஏற்பாட்டையும் ரஞ்சனி செய்திருந்தாள்.மீரா இறந்த கேசில் இழப்பீடு வழங்கவும் சிங்காரத்தை அரெஸ்ட் பண்ணவும் நாளுக்கு நாள் போலீசுக்கு பிரஷர் போடப்பட்டது .சிறப்பு அதிகாரி சஞ்சய் நியமிக்கப்பட்டான் . இது வரைக்கும் ஒரு ஆக்ஷனும் எடுக்கலேயே ஏன் சார் ? மக்கள் போராட்டம் நடத்துனாதான் action எடுப்பீங்களா ? போன்ற பத்திரிக்கியாளர் கேள்விகளை நாசுக்காக தவிர்த்தான் . சிங்காரத்தை நான் பாக்கணும் ...Read More

7

இரவுக்கு ஆயிரம் கைகள் - 7

ராமுக்கும் தீபுவுக்கும் மூச்சே நின்றுவிட்டது .சஞ்சயை சிங்காரம் கொன்று விட்டான் .நாம இந்த ஊரிலேயே இருக்க வேண்டாம் கொஞ்ச நாள் ரஞ்சனி, ராகவ் கூட இருப்போம் அதுதான் safety என்றான் ராம் .என்னை தொட வந்தான்ல தூக்கி கடல்ல போடுங்கடா அப்பதான் என்னை பத்தின பயம் இருக்கும் . பென்drive ல கேமரா வெச்சது நல்லதா போச்சு. நான் இதை எதிர்பாக்கலே என்றாள் தீபு .விஷயத்தை ராகவிடம் சொன்னான் அதுக்கென்ன தாராளமா தங்கலாம் என்னோட வாடகைக்கு விட்ட வீடு இப்போ காலியாதான் இருக்கு . ஒருபுறம் ராகவ் ரஞ்சனியோடு இருக்கப்போகிறோம் என்றாலும் மறுபுறம் சிங்காரம் இன்னும் என்னென்ன வேலை செய்வானோ என்ற அச்சம் எழுந்தது . ட்ரைனில் போகலாம் என முடிவெடுத்தார்கள் தீபூவை வீட்டுக்கு போக வேண்டாம் போனால் ஏதாவது உளறிவிடுவாய் போன்ல சொல்லிடு என்றான் . ராகவ் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து வரவேற்றான் .ஊர் முழுக்க பரபரப்பை உண்டு ...Read More

8

இரவுக்கு ஆயிரம் கைகள் - 8

தீபுவின் இடது தோள்பட்டையில் குண்டு பாய்ந்திருந்தது . மயங்கி சரிந்தாள்.தீபு தீபு என ராம் அரற்றினான். அவசரமாக அள்ளி எடுத்து கொண்டு ஹாஸ்பிடல் விரைந்தான் . பொண்ணு சார் எப்படியாவது காப்பாத்துங்க என ராகவ் டாக்டர்களிடம் மன்றாடினான் . ரஞ்சனியும் ஊரிலிருந்து வந்து விட்டாள். ஆபரேஷன் செய்து குண்டை அகற்றினார்கள் .deepu கொஞ்ச நாள் ஆஸ்ப்பிடல்லேயே இருக்கட்டும் அதுதான் நல்லது என மருத்துவர்கள் சொன்னார்கள் . தீபு இன்னும் கண் விழிக்கவில்லை .ராஸ்கல்ஸ் என்று கறுவினான் ராம் . செத்தீங்கடா என்று தனக்கு தானே பேசிக்கொண்டான். போலீஸ் வந்து விசாரித்தார்கள் . மூணாம் நாள்தான் தீபு கண் திறந்து பார்த்தாள். வெரி சாரி தீபு என்றான் ராம் உணர்ச்சி வசப்பட்டவனாய் இருந்தான் . நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க ராம் நாங்க தான் இங்க இருக்கோம்ல என்றான் ராகவ். எல்லாரும் இருக்கறப்ப தானே இது நடந்துச்சு . நீங்க கூட ...Read More

9

இரவுக்கு ஆயிரம் கைகள் - 9

ஷியாம் போலீசுக்கு அதிக தொந்தரவு கொடுக்கவில்லை .குற்றங்களை ஒப்புக்கொண்டான் . அவன் ஏன் அப்புவை கொன்றான் என்ற கேள்விக்கு சிசிடிவி footage எடுத்த விவகாரத்தில் தற்செயலாக விபத்து என்றான் . முத்துவின் கொலையையம் ஹமீதின் கொலையையும் தான்தான் ஆள் வைத்து செய்ததாகவும் சொன்னான். மீரா பண விஷயத்தில் பேராசைப்பட்டாள் என்றும் சொன்னான் . அவனை சம்பவம் நடந்த இடங்களுக்கு அழைத்து போனார்கள் . அவன் திரும்பவும் அதை செய்து காட்டினான் . தூத்துக்குடிக்கும் அழைத்து போனார்கள் .ஒரு சாட்சி கூட இல்லையே, கைரேகை கூட இல்லாதது போலீசாருக்கு பெருத்த ஏமாற்றத்தை உண்டு பண்ணியது .இந்த கேஸ் நிக்காதுப்பா என பேசிக்கொண்டார்கள் . ராம் நடப்பவற்றை தெரிந்த source மூலம் நாள்தோறும் அறிந்து வந்தான். எல்லா சாட்சிகளையும் அழித்து விட்ட ஷ்யாமுக்கு போலி பாஸ்போர்ட் கேஸ் மட்டும் வெளியே வர தடையாய் இருந்தது . சிறையில் ஷ்யாமை ஒரு கோஷ்டியினர் இரும்பு ...Read More

10

இரவுக்கு ஆயிரம் கைகள் - 10

விடியோவை முதலில் பிரதி எடுத்தான் . இந்த வீடியோ பல பேரை கதிகலங்க செய்யும் அதே அளவு நமக்கும் ஆபத்து என்பதால் ராகவிடம் கூட சொல்லாமல் . அப்பு துணிச்சலாக கடைசி வரை போராடி இருக்கிறான் .அதை நாம் ஒன்றுமில்லாமல் செய்து விடக்கூடாது என நினைத்தான் . விடியோவை யாருக்கும் தெரியாமல் எப்படி கோர்ட் இல் ப்ரொடியூஸ் செய்வது என பலவாறாக சிந்தித்தான் . தீபுவிடம் சொல்லலாமா வேண்டாம் .டெல்லிக்கு போய் கொடுத்தால் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் . தெரிந்த நண்பர் இருந்தார் அவருக்கு போன் செய்தான் . அசோக்குக்கு நீ இன்வோல்வ் ஆயிருக்கேன்னு தெரிஞ்சாலே உன்னை கொன்னுடுவாம்பா . இந்த நேரத்தில் தீபு இருந்தால் உதவியாய் இருக்கும் .தீபு ரெண்டாம் நாளே வந்துவிட்டாள்.அவளுக்கு சூழ்நிலையை விளக்கினான் .நாம அனுப்ப வேண்டாம் அவங்களே கண்டுபிடிக்கிற மாதிரி செஞ்சா ?அப்படி செய்ய முடியுமா தீபு ? அவங்களுக்கு மொட்டை கடிதம் ஒன்னு போடுவோம் ...Read More

11

இரவுக்கு ஆயிரம் கைகள் - 11

தீபுவுக்கு லதாவை தெரியும் ஆனால் லதாவுக்கு தீபு பற்றி தெரியாது .ஆபீஸ் அட்ரஸ் வாட்ஸாப்ப் செய்திருந்தாள் . அடுத்த ஒரு மணி நேரத்தில் லதா அங்கிருந்தாள். உள்ளே வாங்க என வரவேற்றாள் தீபு. இவங்கதான் லதா டிடெக்ட்டிவ் என ராமுக்கு அறிமுகம் செய்தாள். அவனும் புன்னகையோடு வரவேற்றான் . என்னை உங்களுக்கு தெரியுமா என்றாள் லதா . நல்லா தெரியும் .என்ன விஷயம் சொல்லுங்க. அப்பு murder கேஸ் ல விடியோவை ஜட்ஜ் வெங்கடாச்சலம் வீட்டுக்கு அனுப்ப சொன்னது யார்னு கண்டுபிடிக்க சொல்லி எங்க agency கிட்டே அசோக் ஒர்க் குடுத்திருக்காரு .நாங்க ஏன் அதை செய்யணும் இவ ஆபீஸ் யூஸ்கு பெண் டிரைவ் வாங்க போனா என்றான் ராம். ஓ நான் நீங்கதான்னு தப்பா நெனச்சுட்டேன் . சுற்றி முற்றி பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் வண்டியை எடுத்துக்கொண்டு விரைந்தாள் லதா. இந்த முறை ஷியாம் தப்பித்ததில் போலீஸ் ஹெல்ப் ...Read More

12

இரவுக்கு ஆயிரம் கைகள் - 12

செல்வியின் உடல் அப்புவின் உடலருகே நல்லடக்கம் செய்யப்பட்டது . தீபுவும் வந்திருந்தாள். ராகவ் கொஞ்ச நாளுக்கு இங்கேயே இருங்க ராம் என்றான் . இந்த கொலையையும் செய்தான் என கைரேகை நிபுணர்கள் உறுதிப்படுத்தினார்கள் . செல்வியுடைய உடமைகைளை ராம் ஆராய்ந்தான், அதில் விசேஷமாக ஏதுமில்லை . ரஞ்சனியும் வருத்தப்பட்டாள். லதாவிடம் ஏதாவது தகவல் கிடைத்ததா என கேட்டான் . அவள் சில விஷயங்களை சொல்லி இருந்தாள்.இப்படியே போனால் ராகவ் குடும்பத்தில் ஒருவர் கூட மிஞ்சமாட்டார்கள் என நினைத்தான் .போலீஸ் பாதுகாப்பு கேட்பது கூட வீண் வேலை .வேறு சில கேஸ் அழைப்புகளும் ராமுக்கு தொடர்ந்து வந்தன .அதை எல்லாம் லதாவை பார்க்க சொல்லி விட்டான். என்ன பண்ணிட்டு வந்த ஷியாம் .செல்வியை போட்டு தள்ளிட்டேன். யாரு செல்வி அதான் அப்புவோட wife .அவளை ஏன் கொன்ன.ரொம்ப பேசுனா அவதான் என்னை காட்டி குடுத்தா .சரி நீ இங்கே இருந்தா எனக்குதான் ...Read More

13

இரவுக்கு ஆயிரம் கைகள் - 13

லதா அந்த மைக்ரோபோனை எடுத்துவிடலாம் என ஐடியா குடுத்தாள் . அதிலே ரிஸ்க் இருக்கிறது என்றான் ராம். நானே போய் எடுத்துட்றேன் . என்னவோ எனக்கு . இப்போ நீ அங்கே போனா சந்தேகம்தான் வரும் .அசோக் அப்பிடியே கண்டுபிடிச்சாலும் ஒன்னும் பிரச்னை இல்லை .சார் வந்து.. இதோட இந்த டாபிக்கை விட்டுடு . நான் வேற வழியா அதை எடுத்துட்றேன் போதுமா என்றான். தீபக் வந்து எந்த microphone ? ஓ அதுவா லதா சிஸ்டர் மாட்டுனா அன்னிக்கி என் treat என சிரித்தான் . எதிர்பார்த்தது போல் அஷோக்கிறகு ஜாமீன் கிடைக்கவில்லை .எல்லாரும் சேர்ந்து ட்ரிப் போலாமா என்றான் தீபக் .அதெல்லாம் வேண்டாம்பா இப்போதான் புது ஆபீஸ் தொறந்திருக்கோம் செலவு எக்கச்சக்கமா ஆயிருச்சு .முன்னாடி நானும் தீபுவும் மட்டும் இருந்தோம் . இப்போ தீபுவையும் சேர்த்து நாலு பேரு. நியூ கேஸ் எதுவம் கால் வந்ததா . ...Read More

14

இரவுக்கு ஆயிரம் கைகள் - 14

நானே போய் பாக்குறேன் என்றான் ராம். ஓகே சார் .மணி 9 ஆகியிருந்தது .ராம் பிருந்தா ஹோட்டல் அடைந்தவுடன் போன் செய்தான் அந்த left corner எல்லோ சுடிதார் .நல்ல அழகாய் இருந்தாள்.நிச்சயம் ஆபத்து இருக்கிறது .அதிதியும் கூட இருந்தாள் . அங்கிள்க்கு ஹாய் சொல்லு . ஹாய் அங்கிள். ரொம்ப சாரி அதிதி கிருபா கூட இருந்த வரை என்னால அவர் பேச்சை மீற முடியாது .உங்க மேல complaint பண்ணியிருக்கிறதா சொன்னார். விஷயத்துக்கு வாங்க . எங்க அப்பா இறந்த கேஸ் ,அக்கா இறந்த கேஸ் ரெண்டுமே suicide போல தெரிஞ்சாலும் அதுல ஏதோ மர்மம் இருக்கு இதுல அப்பாவோட எஸ் பி ஐ லாக்கர் சாவி இருக்கு நாளைக்கு போய் பாருங்க நான் ஏற்கனவே பேசிட்டேன் . ஏதாவது clue கிடைக்கலாம் . சரி நீங்க கிளம்புங்க ஏதாவது மெசேஜ் urgent ஆ சொல்லனும்னா கேஷ் ...Read More

15

இரவுக்கு ஆயிரம் கைகள் - 15

ராம் தீபக்கை அழைத்துக்கொண்டு பெங்களூரு புறப்பட்டான்.அவளுக்கு ஒன்றும் ஆகியிருக்க கூடாது . அதிதிக்கு அவளை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் .முகவரியை கேட்டு வாங்கியிருந்தான் தீபக். ஹாஸ்பிடலில் ICU வில் இருப்பதாக சொல்லியிருந்தாள். இவர்கள்போய் சேர்ந்தவுடன் விசாரித்ததில் வேலை செய்யும் அக்காதான் முதலில் பார்த்ததாகவும் பிறகு போலீஸ் வந்து கதவை உடைத்து மீட்டதாகவும் அதிதி இப்போது தீப்தியுடைய friend கயல்விழி வீட்டில் இருப்பதாகவும் சொன்னார்கள் . டாக்டர்களிடம் விசாரித்தான் . அவங்க இன்னும் critical கண்டிஷன்லதான் இருக்காங்க 12 ஹௌர்ஸ் கழிச்சுத்தான் சொல்ல முடியும் . வேலைக்கார அக்கா இந்தாங்க சாவி தீப்தி உங்களை பத்தி சொல்லி இருக்கு ஏதாவது ஆச்சுன்னா அந்த கேஷ் கவுண்டர் பொண்ணுக்கும் தகவல் குடுக்க சொல்லி இருந்தாங்க . நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு வீட்டுல குழந்தைங்க தனியா இருப்பாங்க என்று விரைந்தாள் . பெண் போலீஸ் ஒருத்தர் இரவு காவலுக்கு இருந்தார். ...Read More

16

இரவுக்கு ஆயிரம் கைகள் - 16

என்ன சார் ஒரு வழியா என் பேமிலி மொத்தமும் புடிச்சிட்டீங்க போல கிருபாவின் குரல்தான் அது .அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை . கூடிய சீக்கிரம் சந்திக்கிறேன் பை . யாரு போன் ல ஒண்ணுமில்ல client தான் என சமாளித்தான் . அதிதியும், தீப்தியும் அமைதியாக வாழவே ராம் விரும்பினான் . லதாவின் காரில் அதிதியும் தீப்தியும் ஏறிக்கொண்டார்கள். என்ன சார் தீப்தி அக்கா மேல.. பார்த்து வண்டி ஓட்டு .யாருமேயில்லேன்னா அதோட துக்கம் எப்படியிருக்கும்னு எனக்கு தெரியும் .உனக்கு எல்லோரும் இருக்கிறப்ப அதோட அருமை தெரியாது . புரிஞ்சிடிச்சு சார் சாரி .கிருபா இருக்கும் இடம் தெரியாமல் போலீஸ் திணறினார்கள் . தீப்தியை சாயங்காலம் சந்தித்தான் . என்ன லதா வீட்டை நல்ல வெச்சிருக்காங்களா . பரவாயில்லை சார் சேப்டி தான் முக்கியம் . நல்லா ரெஸ்ட் எடுங்க எதை பத்தியும் கவலை படாதீங்க என்றான் . பூர்ணிமாவுடைய டைரியையும் ...Read More

17

இரவுக்கு ஆயிரம் கைகள் - 17

ஒரு கணம் ஸ்தம்பித்து போயிருந்தான். சுதாரித்து கொண்டு பாப்பா பர்த்டே எப்போ என்றான் ?ஆகஸ்ட் 13th . நாம இந்த தடவ கண்டிப்பா செலிப்ரட் பன்றோம் தீபக் அதிதியை அழைச்சுட்டு போய் chocolates ,பொம்மை எல்லாம் வாங்கி குடு . brave கேர்ள் என சொன்னான் . இன்ஸ்பெக்டர் ரமேஷ் அதிதி சொன்னதை ஆடியோவில் பொறுமையாக கேட்டார் . என் பொண்ணு பாவம் சார். அவளையும் கொன்னுடுவான்னு பயந்துதான் தலைமறைவா இருந்தேன் . தீப்தியும் குமாரும் லவ் பண்ணினாங்க . நாங்க அதை ஏத்துக்கலை. ஏன்னா குமாருக்கும் என் மனைவிக்கும் காண்டாக்ட் இருந்தது உண்மை . இதை ஊர்லயிருந்து வந்த தீப்தி பாத்துட்டா . வேற வழி இல்லாம ஆத்திரத்துல கொன்னுட்டா . மனோகர்க்கு தான் சின்ன பொண்ணு மேல அவ்ளோ நம்பிக்கை . ஒரு வேலை அதிதி அவர்கிட்டேயும் சொல்லி இருக்கலாம் .என்னையும் என் குழந்தையும் விட்டுடுங்க சார் ...Read More

18

இரவுக்கு ஆயிரம் கைகள் - 18

போலீஸ் வந்து பத்ரியின் உடலை கைப்பற்றினார்கள் . எல்லோருடைய விலாசங்களையும் குறித்து கொண்டார்கள். எப்ப கூப்பிட்டாலும் வரணும் என எச்சரித்தார்கள். பத்ரி உடல் எதற்காக ரமேஷ் வைக்கப்பட்டிருந்தது . யாரேனும் ரமேஷை மாட்டிவிட வேண்டுமென்றே செய்திருப்பார்களோ . ஸ்ரீ இன்னும் அழுதவாறே இருந்தாள். அவன் அப்போவே வேண்டாம் நான் வரலைன்னு சொன்னான் நான்தான் கம்பெல் பண்ணி கூட்டி வந்தேன் .ராம் எதுவும் சொல்லாமல் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏறிக்கொண்டான் . சிறிது தயங்கியவாறு நின்ற ஸ்ரீயும் ஏறிக்கொண்டாள் . மணி விடிகாலை 3 காட்டியது. மறுநாள் நிறைய பத்ரி கூட படித்த ,வேலை பார்த்த நண்பர்கள் வந்திருந்தனர் . போலீஸ் உன்னிப்பாக ஒவ்வொருவரையும் கவனித்தது. ஸ்ரீ க்கு ஆறுதல் கூற முடியாமல் தவித்தனர் . மீனா வரவில்லை . மதுவந்தி வந்திருந்தாள். பவன் சொல்லமுடியாத துயரத்தில் இருந்தான். பத்ரியின் உடல் அவன் குடும்ப வழக்கப்படி எரிக்கப்பட்டது . ராம் யாரையும் சந்தேகப்படவில்லை ...Read More

19

இரவுக்கு ஆயிரம் கைகள் - 19

ஸ்ரீக்கு வந்த மெசேஜ் எவனோ அனுப்பியதில்லை சௌம்யாவின் கணவர் அனுப்பியது, இது பற்றி அவரிடமே கேட்க போன் போட்ட போது என்னுடைய போனை யாரோ ஹேக் மன்னிக்கவும் என்ற தொனியில் பேசினார். ஸ்ரீ நீ கொஞ்சம் அமைதியா இரு எப்படியும் புடிச்சிடுவோம் . மொதல்ல பத்ரி இப்போ ரமேஷ் அடுத்து நீன்னு ஒரு மெசேஜ் . எனக்கு பயமா இருக்கு . இட்ஸ் ஓகே என்று விடை பெற்றான் .ஒரு சேஞ்சுக்கு நாளைக்கு உன் ஆபீஸ் போயேன் ஏன் வீட்டுக்குள்ளே அடைஞ்சு கெடக்குறே . சரி நாளைக்கு போறேன். ராம் அந்த டிஜேவை அரெஸ்ட் செய்து விசாரிக்க சொல்லலாம் என நினைத்தான். தீபக் அதற்குள்ளாக அவங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைதான் தோணுது . இந்த சவுரி முடியை பார்த்தீங்களா நிச்சயமா ஒரு பொண்ணோடதுதான். இதையும் ஏற்கனவே எடுத்த சாம்பிள் கம்பர் பண்ணா தெரிஞ்சுடும் . வெரி குட் தீபக் . என்னால ...Read More

20

இரவுக்கு ஆயிரம் கைகள் - 20

ஸ்ரீ கேசில் மறக்க முடியாத வாழ்க்கை பாடங்களை ராம் கற்றுக்கொண்டான் . தற்கொலைக்கு தூண்டுவதும் குற்றம்தான் . டி ஜெ முருகன் என்ன காரணத்திற்காக பொய் என்பது தெரியவில்லை .பயம் மனிதனை குற்றவாளி ஆக்குகிறது . ஸ்ரீக்கு எந்த குற்ற உணர்வும் இல்லாததும் ஆச்சயர்யமாய் இருந்தது . கோபி,பவன் பேராசை பெரு நஷ்டத்துக்கு உதாரணம். தீபக் ,லதா இருவருமே நீண்ட விடுப்பில் போயினர். இன்னும் எத்தனை முடியாத வழக்குகள் இவனுக்குக்காக காத்திருக்கிறது. இதையும் கடந்துதான் ஆகவேண்டும்.இப்படியாக யோசித்து கண் அயர்ந்துவிட்டான் . மணி மதியம் 3 ஆகி இருந்தது . எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தினான் . லதாவும் , தீபக்கும் நாளை திரும்ப வருவார்கள். இன்ஸ்பெக்டர் ரமேஷ் போன் பண்ணியிருந்தான் ஒரு கேஸ். பெண்ணுக்கு அப்பா அம்மா இல்லை . லவ் marriage .வேறொருத்தரோடு பையனுக்கு தொடர்பு .பையனை காணவில்லை , தேடுகிறார்கள் . அந்த illegal தொடர்புடைய பெண்னுக்கு ...Read More

21

இரவுக்கு ஆயிரம் கைகள் - 21

ராம் புதிய சவால்களை எதிர்கொள்ள ட்ரைனிங் அவசியம் என நினைத்தான் . பயிற்சி பட்டறை நிகழ்வில் கலந்து கொள்ள பதிவு செய்திருந்தான் . லதா , ஆகியோரும் கலந்து கொள்வதாக ஏற்பாடு .மூணு நாள் நிகழ்ச்சி . பெங்களூரு குளுமையை எப்போதோ இழந்து விட்டிருந்தது . நிகழ்ச்சியின் முதல் நாளில் மன அமைதியை பேணுவதில் தொடங்கினார்கள். அப்போதுதான் அங்கிருந்த பிற பிரைவேட் agency உறுப்பினர்களை பார்த்து பேச தொடங்கினார்கள் . சிக்கலான கேஸ் மற்றும் பணம் வராத கேஸ் முதற்கொண்டு பேசி சிரித்தார்கள் . லதா ரொம்ப ஆர்வமாக technical செஷன் பகுதிகளில் பங்கேற்றாள்.அப்போதுதான் கோவை பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரை சந்தித்தான் . குமரேசன் இப்போதுதான் சிறிய அளவில் துவங்கி இருந்தார். மாப்பிள்ளை பின்புலம் அறிவதில் இருந்து வேலைக்கு ஆள் எடுப்பது வரை சிறிய வேலைகளை செய்து வந்தார் . அவராகவே அறிமுகபடுத்திக்கொண்டார், சமீபத்துல ஒரு பையன் என்னை ...Read More

22

இரவுக்கு ஆயிரம் கைகள் - 22

இது ரொம்ப ரிஸ்க் ஆன வேலை நேஹாவுக்கு பதிலாய் லதாவை அனுப்பலாமா என யோசித்தான் .எப்படியும் யாராவது ஒருவர் போய்தான் ஆகவேண்டும்.நேஹா கெளதம் போட்டோவை வாட்ஸாப்ப் கேட்டிருந்தாள். அந்த போட்டோவை போலீசிடம் காட்டி விசாரித்த போது இவனும் அவனை போல் தேடப்படும் போலி மாப்பிள்ளை என தெரிய வந்தது . நேஹா குறிப்பிட்ட நேரத்துக்கு போய்விட்டாள் . கெளதம் இன்னும் வரவில்லை . உல்லாசுக்கு போன் செய்தாள் . அவன் இன்னும் 10 நிமிடத்தில் வந்துவிடுவான் . பணம் விஷயத்தில் விளையாண்டால் என்ன வேணா நடக்கும் என எச்சரித்தான் . போலீசுக்கு இது பற்றி தெரியப்படுத்தவில்லை . கெளதம் வந்துவிட்டான். இவள் பணத்தை ஒப்படைத்தாள். வீடியோவை ஒப்படைத்தான். ஒன்றும் பேசாமல் போய்விட்டான் .பார்க்கிங் ல் கெளதம் இறந்து கிடந்தான் . அருகிலேயே பணப்பெட்டி கிடந்தது யாரோ சுட்டிருந்தார்கள் . நேஹா துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு வந்து பார்த்தாள். செக்யூரிட்டி ...Read More

23

இரவுக்கு ஆயிரம் கைகள் - 23

தீபு திரும்ப டூட்டிக்கு வந்துவிட்டாள்.ஒரு வருஷத்துக்கு பிறகு திரும்ப வந்து விட்டாள். குழந்தையை மாமியார் வீட்டில் விட்டிருந்தாள் . தீபு லதாவுடன் தங்குவதாக ஏற்பாடு செய்து ராம். வாரம் ஒரு தடவை திருத்தணி போய் பார்த்துக்கொள்ளலாம். தீபு சுறுசுறுப்பாக பெண்டிங் கேஸ் ஏதாவது இருக்கிறதா என்றாள். பெண்டிங் payment தான் இருக்கிறது என்றான் தீபக். தீபுவுக்கு ஒரு பிரத்யேக கேபினை உருவாக்கி குடுத்திருந்தான் ராம் . ரொம்ப தேங்க்ஸ் சார் என நெகிழ்ந்தாள். பெண்டிங் கேஸ் ஒன்னு இருக்கு அத இப்போ பாக்குறதா வேண்டாமா தெரியலியே . சும்மா சொல்லுங்க.. சார் அந்த தீபிகா கேஸ் . வேண்டாம்மா அத நானே பாக்குறேன் . இல்ல சொல்லுங்க லதா என்றாள் . தீபிகா வயசு 24 . கல்யாணமாகி ஒரு வருஷம்தான் ஆச்சு .மாடிலேயிருந்து குதிச்சு இப்போ கோமா ல இருக்காங்க . husband மிலிட்டரில இருக்கார் . விசாரிச்சதுல ...Read More

24

இரவுக்கு ஆயிரம் கைகள் - 24

இந்த மூணு பேரும் அதே அபார்ட்மென்ட்லதான் இருக்காங்களான்னு கண்டுபிடிக்கணும் . பத்திரிக்கையாளர்கள் பரந்தாமனிடத்தில் கேள்விகளை எழுப்பினார்கள் . உண்மை குற்றவாளிகளை அரெஸ்ட் செய்த போலீசுக்கு நன்றி சொன்னார். ஒரிஜினல் போல ஒரு fake வீடியோ வை தயார் செய்து வெளியிட்டிருக்கிறார்கள் . நந்தா,ரமீஸ் இரண்டு பேரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை . ஆனந்த் agency பூட்டி கிடந்தது .யார் இந்த எங்கே விடியோவை தயார் செய்திருப்பார்கள் . இதனால் யாரை தப்பிக்க வைக்க பார்க்கிறார்கள் என்ற உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் தீபு நானும் தீபக்கும் அந்த அபார்ட்மெண்ட்கு போகிறோம். அரெஸ்ட் ஆன 3 பேரும் அப்பாவிகளா இல்லை கிரிமினல் லிஸ்ட் இல் உள்ளவர்களா என விசாரி . சரி சார். தீபக் லிப்ட்டில் வீடியோ எடுத்த நபர்களை காட்டி விசாரித்தபோது அவர்கள் 2nd floor இல் இருப்பதாக சொன்னார்கள் கார்த்திக் , நரேஷ், தீபன் . அவர்கள் ரொம்ப நல்ல ...Read More

25

இரவுக்கு ஆயிரம் கைகள் - 25

பிரவீன் இறந்து விட்டான். இந்த செய்தியை தீபிகா உணரக்கூட இல்லை. nurse ருக்மணி இந்த செய்தியை தீபிகா கேட்கும்படி சொல்லி பார்த்தாள்.அப்போதும் அவளிடத்தில் எந்த ஒரு அசைவும் இல்லை . பரந்தாமன் போலீஸ்காரர்களையும் மீடியாவையும் சமாளிப்பதில் ஈடுபட்டார். அமரன் வந்திருந்தான் . ஒரு மாத விடுப்புக்குள் பிரச்னை எல்லாம் தீர்ந்துவிடும் என நம்புவதாக பரந்தாமனிடம் சொன்னான். போஸ்ட்மோர்டெம் ரிப்போர்ட் தெளிவாக சொன்னது பிரவீன் தவறி விழவில்லை யாரோ பலவந்தமாக தள்ளியிருக்கிறார்கள். நரேஷ், தீபன், கார்த்திக் மூவரும் அடுத்து என்ன செய்வதென தெரியாமல் விழித்தனர். யார் இந்த கொலையை செய்திருப்பார்கள் என யோசிக்க தொடங்கினார்கள். போலீஸ் இவர்களையும் விசாரித்தது . பிரவீன் விழுந்திருந்தது ஆளில்லாத புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் . அமரனும் தன் பங்குக்கு விசாரணை செய்ய தொடங்கினான் . வீடியோ விவகாரம் அவனுக்கு தெரிய வந்தது .ப்ரவீனுடைய உடைமைகளை நிதானமாக ஆராய்ந்தான் . அதில் என்ன தேடுகிறோம் என்ற ...Read More

26

இரவுக்கு ஆயிரம் கைகள் - 26

அது ஒரு பழைய கேஸ் என்பதால் காசிநாதன் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை . போலீஸ் காசியை மிரட்டி விட்டு விட்டார்கள் என்று சொன்னார் தீபிகா அம்மா. ஊரிலிருந்து வந்தவுடன் ராமை தொடர்பு கொண்டான். ஆனந்த் agency என்ன ஆச்சு ? அது எங்க சித்தப்பா காசியோடது தான். ஆனா அவருக்கும் இந்த விஷயத்துக்கும் சம்பந்தம் இல்லை . ஆனா அடுத்தவனை கொலை பண்ற அளவுக்கு அவருக்கு துணிச்சல் கிடையாது. அந்த பிரச்னைக்கப்புறம் காசி சித்தப்பா அந்த தொழிலையே விட்டுட்டார். இப்போ எங்கே அவர் . அவர் செத்து மூணு மாசம் ஆச்சு . குடி பழக்கத்துக்கு அடிமை ஆகிட்டார். சரி நந்தா இந்த வீடியோ விஷயம் வேற யாருக்காவது தெரியுமா. நல்லா யோசிச்சு சொல்லு லிப்ட் ஆபரேட்டர் மணிக்கு தெரியும் .அவர் பொண்ணு கல்யாணத்துக்கு தீபிகா அக்கா பணம் கொடுத்து ஹெல்ப் பண்ணாங்க .அவரும் அமரனும் நல்ல காண்டாக்ட் ல ...Read More

27

இரவுக்கு ஆயிரம் கைகள் - 27

இரவு பல ரகசியங்களை கொண்டது . மனித மனமும் தான். இதைப்பற்றி ராம் சிந்தித்து கொண்டிருந்த போது.. சார் என்ன சிந்தனைல இருக்கீங்க. தீப்தி ஏன் அந்த முடிவை எடுத்தா ? உண்மையிலேயே நன்றிக்கடனுக்கு மதிப்பு இருக்குது போல . சார் அந்த கேஸ் விட்டு வெளிய வாங்க . இப்போ ஒரு புது கேஸ் வந்திருக்கு . அதுக்குள்ளயா ? பண மோசடி கேஸ் . ஏழுமலையை பேங்க் ல பணத்தை கையாடல் பண்ணிட்டதா சொல்லி அரெஸ்ட் பண்ணி இருக்காங்க . அவர் மேல எந்த தப்பும் இல்லனு ப்ரூவ் பண்ணனும் . ஏழுமலை போலீஸ் ஸ்டேஷன்லேயே இறந்துட்டாரு. அந்த பணத்தை கட்ட சொல்லி குடும்பத்தாரையும் தொந்தரவு பண்ணிருக்காங்க. அவங்க பையனும் பொண்ணும் வேற வழி இல்லாம நம்மகிட்டே வந்திருக்காங்க. பையன் பேரு பிரதீப் ,பொண்ணு பேரு ரோகினி . ரெண்டு பெரும் காலேஜ் ல படிக்கிறாங்க . ...Read More

28

இரவுக்கு ஆயிரம் கைகள் - 28

லாக்கரை ஓபன் செய்தால் போதும் . அதிலுள்ள பண நோட்டுகளை காணாமல் போன நோட்டுகளுடன் ஒப்பிட்டால் எளிதில் ஏழுமலை மீதுள்ள பழி காணாமல் போய்விடும். இரண்டு சௌம்யாவிடம் சொல்லி ஒரு லாக்கர் அக்கௌன்ட் ஓபன் பண்ணினான். பழைய படங்களில் வருவது போல சாவியை குமரேஷ் மாற்றி குடுத்தால் போதுமானது . எல்லாம் கூடி வருகையில் வெங்கட்டின் மனைவி மட்டும் வராமல் இருக்க வேண்டும் . . குமரேஷ் போன் செய்திருந்தான் 10 missed கால்ஸ் என்றிருந்தது. இன்று காலை வெங்கட் மனைவி வந்ததாகவும் லாக்கரை திறந்து ஏதோ எடுத்து சென்றதாகவும் கூறினான். பரவாயில்லை குமரேஷ் நீ ஒரு டூப்ளிகேட் key மட்டும் ரெடி பண்ணு என்றான். key ரெடி ஆ இருக்கு வீட்டுக்கு இப்போ வரீங்களா அட்ரஸ் மெசேஜ் உடனே வரேன் . போய் பார்த்த பொது குமரேஷ் அங்கு இல்லை . வெங்கட் என்பவரும் போலீஸ் ஒருத்தரும் வந்து ...Read More

29

இரவுக்கு ஆயிரம் கைகள் - 29

ராமுக்கு மூன்று நாட்களாக ஜுரம் . தெருமுனை டாக்டரிடம் போய் ஊசி போட்டுகொண்டு வந்தான்.ராமுக்கு டாக்டர்ஸ் என்றாலே பயம் கலந்த அலர்ஜி. என்ன பாஸ் ஊசி என்றாள் தீபு . ஆமா ஊசின்னா எனக்கு பயம் பாரு . சின்ன பிள்ளை போல தீபு சிரித்தாள் . டாக்டர் பிரதாப் மிஸ்ஸிங் னு பேப்பர் ல வந்துதே ஏதாவது updates ?அவரு காணா போய் ஒரு வாரம் ஆகுது .இன்னும் கிடைக்கலை. ரொம்ப நல்ல டாக்டர் ஏழைகளுக்கு இலவசமா treatment பண்றவர். நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க பாஸ் .சரி தீபு யாராவது எனக்கு போன் பண்ணா அட்டென்ட் பண்ணு. ஓகே பாஸ் . ராம் சோபாவிலேயே படுத்து தூங்கினான் . தீபு மற்றொரு செய்தியை அப்போதுதான் கவனித்தாள். பிரபல எழுத்தாளர் ரஞ்சன்குமார் கொலை .மருத்துவ கண்டுபிடிப்புகள் சம்பந்தமாக கட்டுரை எழுதி வந்த நிலையில் கொலை . ராமுக்கு கால் ...Read More

30

இரவுக்கு ஆயிரம் கைகள் - 30

சரி வா தீபக் மணி வீட்டுக்கு போய் பாக்கலாம் . அதற்குள் போன் வந்துவிட்டது. பார்மா கம்பெனிக்காரங்க என்கிட்டே patient details கேட்டாங்க. நானும் கொடுத்தேன் ஆனா அது ஒரிஜினல் இல்லயாம் . ஒரிஜினலை குடுக்க சொல்லி என் மனைவியை கடத்திட்டாங்க சார். உங்களை நம்பலாமா மணி. நாங்க கேட்டப்ப இல்லேனு சொன்னீங்க. தப்புதான் சார் இப்போ போலீசுக்கு போனா என் மனைவியை கொன்னுடுவேன்னு மிரட்டுறாங்க . ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க சார். ரெண்டு நாள் டைம் குடுத்திருக்காங்க அதுக்குள்ள அந்த patient details கண்டுபிடிக்கணுமாம். நாளைக்கு எங்க ஆபீஸ்க்கு வந்துடுங்க . சரி ராம் என்றான் . மணி மேல எனக்கென்னவோ இன்னும் சந்தேகமாத்தான் இருக்கு . நிரஞ்சன்குமார் கிட்டே சொல்லித்தான் பிரதாப் newspaper column எழுத சொல்லி இருக்கணும் . நிரஞ்சனைதான் கொன்னுட்டாங்களே . அந்த பேப்பர்ஸ் அவர் பத்திரமா வெச்சிருக்கணும் . நிரஞ்சன்குமார் வீடு அண்ணா ...Read More

31

இரவுக்கு ஆயிரம் கைகள் - 31

இரவு அடர்ந்த பனியை பூசி இருந்தது . மிகவும் ரசிக்கத்தக்க குளிராக இருந்தது . ராம் அந்த ஹோட்டலின் முதல் மாடியை தேர்வு செய்த போதும் வழி காட்சி ரம்மியமாக இருந்தது . குளிர் காற்று இதமாக வீசியது. ராம் தனியாகத்தான் வந்திருந்தான் .ஊட்டி இத்தனை சுவாரஸ்யமாய் இருக்குமென்று நினைக்கவில்லை . திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது . வெளியே கதவை திறந்து பார்த்தான் , எல்லா அறைகளுக்கும் மின்சாரம் இல்லை . கொஞ்சம் பொறுங்க என்னனு பார்த்துடுவோம் என room boy பொறுமையாக பதிலளித்து கொண்டிருந்தான் . reception அருகே தவிப்பாய் ஒருவன் நின்று கொண்டிருந்தான். பாருங்க சார் கொஞ்சம் நிம்மதியா ஹனிமூன் வந்தா இங்கேயும் பவர் cut . ராம் அவனை புன்னகையுடன் சமாதானப்படுத்தினான் . தன் பெயர் கதிரேசன் என்றும் கல்யாணம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகிறதென்று சொன்னான். இப்போதான் வர நேரம் கிடைச்சது . தான் ...Read More

32

இரவுக்கு ஆயிரம் கைகள் - 32

ஜாபர் நேரில் வந்திருந்தான் . கவிதா எனக்கு சிஸ்டர் மாதிரி சார் . காலைல 9 மணி இருக்கும் அப்போதான் சொன்னா இந்த மாதிரி நவீன் வந்துட்டேன் ஒரே குழப்பமா இருக்குனு சொன்னா .நீங்க என்ன சொன்னீங்க. ஈவினிங் வந்து பாக்குறேன்னு சொன்னேன். நீங்க அப்போ எங்க இருந்தீங்க ஊட்டிலதான் சார் .சரி உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?எனக்கு நவீன் மேலதான் சந்தேகமா இருக்கு. நவீன் நீங்க எல்லாம் ஒண்ணா படிச்சீங்களா ? ஆமா சார் . ஏதாவது முக்கியமான விஷயம் ஞாபகம் வந்தா எனக்கு கால் பண்ணுங்க . நீங்க என்ன நினைக்கறீங்க கதிரேசன் . எல்லாம் முடிஞ்சு போச்சு . சே சே எனக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெர்ல . சரி போஸ்டமோர்டெம் ரிப்போர்ட் என்ன சொல்லுது . அதுல பெருசா findings இல்ல சார் . அவ செத்த டைம் கரெக்ட்டா காலை ...Read More

33

இரவுக்கு ஆயிரம் கைகள் - 33

எது நிலைத்திருக்க போவதில்லையோ அதுவே உன் ஆசை . எது உன்னை நிர்கதியாய் நிறுத்தப்போகிறதோ அதுவே உன் ஆசை . ஆசையை துறந்திட எல்லா உயிர்களையும் நடத்து. குருஜி கண்களை மூடி கொண்டார். இன்னிக்கி பிரசங்கம் முடிஞ்சது எல்லாம் போங்க. அமைதியா போங்க என்றார் தலைமை சீடர். ராம், தீபு, தீபக் , லதா எல்லோரும் தியானத்துக்கு வந்திருந்தார்கள் . எல்லாவற்றிலும் இருந்து விடுபட தியானமே சிறந்ததென்று யாரோ சொல்லி இருந்தார்கள் . ஸ்வாமி.. சே சார் என்ன இது வேஷம் உங்களுக்குத்தான் இதுலெல்லாம் நம்பிக்கை இல்லையே . நம்பிக்கை இல்லைதான்.. ஆனா ஏதோ ஒன்னை நோக்கி மக்கள் போறாங்கன்னா அந்த நம்பிக்கையை நாமளும் மதிக்க வேண்டி இருக்கு . இப்போ என்ன சொல்ல வரீங்க? இந்த குருஜி மேல complaint வந்துருக்கு . அதானே பார்த்தேன் . அது உண்மையா பொய்யான்னு கண்டுபிடிக்கணும் . அதுக்கு தியானம்தான் ஒரே ...Read More

34

இரவுக்கு ஆயிரம் கைகள் - 34

தீப்தி ஜெகநாதனை சந்திக்க விரும்புவதாக சொன்னாள்.கொஞ்ச நாள் பொறு தீப்தி . நாம இப்போதான் குருஜிக்கிட்டே இதை பத்தி பேசி இருக்கோம் என்றான் ராம் . என்னை திரும்ப ஆசிரமத்துக்கு அனுப்பிடுவீங்களா ராம் ? அப்படியெல்லாம் இல்லை . உன் விருப்பமென்ன தீப்தி. நான் அப்பா கூடவே போறேன் . சரி கண்டிப்பா இதை நிறைவேத்துவேன். குருஜி கேட்டா என்ன சொல்லுறது . அதை நான் பாத்துக்குறேன் . நீ ரெஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் சொல்லி இருக்காரு . ஓகே ராம். ராம் ஆசிரமத்துக்கு போனான் . குருஜியிடம் பேச வேண்டும் என சொன்னான் . இப்போ யோக நிலைல இருக்கறதுனால இன்னைக்கி யார்கூடவும் பேசமாட்டார் . நீங்க போய்ட்டு நாளைக்கு வாங்க என்றார் தலைமை சீடர் .ராம் ஏமாற்றத்துடன் திரும்பினான் . மறுநாள் குருஜி அவனை நேரில் வந்து சந்திக்கும்படி அழைத்தார் . ஜெகநாதன் கேஸ் வாபஸ் வாங்கிட்டான். ...Read More

35

இரவுக்கு ஆயிரம் கைகள் - 35

ராம் எப்போதும் போல இல்லாமல் சற்றே சோர்வாக காணப்பட்டான்.இதை பார்த்த தீபு என சார் டல்லா இருக்கீங்க. நான் , தீபக்,லதா எல்லாம் ஆர்ட் கேலரி வரீங்களா என்றாள். நீங்க போய்ட்டு வாங்க பெயிண்டர் சுகேஷ் பெயிண்டிங்ஸ் எல்லாம் அவ்ளோ நல்லா இருக்கும் . சும்மா வாங்க சார். அரை மனதாக சரி வரேன் என்றான் ராம். என்ன தீபக் நீயும் இவங்க கூட சேர்ந்துட்ட போல என கிண்டல் செய்தான். நாம எப்பவுமே டூட்டில தான் இருக்கோம் ஒரு சேஞ்சுக்கு ?சரி சரி போவோமோ . பெயிண்டிங்கில் எத்தனை வகை உண்டோ தெரியாது அதன் வண்ணங்கள் சொல்லும் செய்தி அற்புதமானது என்றார் சுகேஷ். தீபு எல்லோரையும் சுகேஷுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். ரொம்ப சந்தோசம் வந்ததுக்கு என்றார் சுகேஷ்.இவங்க என் wife லட்சுமி என அறிமுகப்படுத்தினார். இவங்க தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் தான் என்றார். சூப்பர் சார் என்று பாராட்டினான் ராம். ...Read More

36

இரவுக்கு ஆயிரம் கைகள் - 36

சுஜிதா கந்தசாமியின் மொபைல் போன் வாங்கி பார்த்தாள். இது அப்போ எங்கிருந்தது . கடையில ரிப்பேருக்கு குடுத்ததால இது மட்டும் திரும்ப எங்க கிட்டயே கொடுத்துட்டாங்க. கால் வந்ததா? வருது . நாங்கதான் அதை ஸ்விட்ச்ஆஃ பண்ணி வெச்சிருக்கோம் . அவருக்கு இந்த ஒன்லைன் ரம்மி ,கேம்ஸ் பழக்கம் உண்டா அதெல்லாம் இல்ல. சரிம்மா உங்க போன் நம்பர் குடுங்க நான் ஏதாவது detail தேவைப்பட்ட கால் பண்றேன். சுஜிதா ராமுக்கு போன் செய்தாள். ஒன்னும் புரியல சார். எல்லாமே நார்மலா இருக்கு ஆனா ஏன் செத்தார்னு தெரியல . அந்த லெட்டர் ல இருக்குற கையெழுத்து அவரோடதுதானா ?ஆமா சார் அப்டித்தான் சொல்றாங்க. ம்ம் போஸ்டமோர்டெம் ரிப்போர்ட் copy வாட்ஸாப்ப் பண்றேன். ஏதாவது clue கிடைக்குதா பாரு . சரி சார் நான் வைக்குறேன் . போஸ்டமோர்டெம் ரிப்போர்ட்டில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிந்தது . சுஜிதா ...Read More

37

இரவுக்கு ஆயிரம் கைகள் - 37

ராம் சுஜிதாவின் கல்யாணத்தில் பம்பரமாய் வேலை செய்தான் . தீபக், லதா, தீபு எல்லோரும் வந்திருந்தார்கள். என்ன ராம் சார் என்ன கேஸ் அடுத்து இருக்கு விசாரித்தார் சுகேஷ். இப்போதைக்கு ஒன்னும் இல்லே சார் என்றான். சொல்லி முடிக்கவும் போன் வரவும் சரியாய் இருந்தது. excuse மீ என்றவாறே கீழே வெளியே வந்து மறுபடி அந்த நம்பருக்கு கால் செய்தான். யாரும் எடுக்கவில்லை . ராம் சுஜிதாவினை நினைத்து பெருமை பட்டான். எவ்ளோ தைரியம் இந்த பொண்ணுக்கு என ஆச்சரியப்பட்டான். திரும்ப வேலைக்கு வந்தால் அவளுக்கு தனி ஆபீஸ் அமைத்து தர வேண்டும் என ஆசைப்பட்டான். மறுபடி போன் அடித்தது .. வேண்டாம்மா போன் பண்ணாதே என அந்த குரல் தடுத்தது. நாங்க இங்க கொட்டிவாக்கதுலேயிருந்து பேசறோம் எங்க வீட்டு வேலைக்கார பொண்ணை 15 நாளா காணோம். உங்களால ஹெல்ப் பண்ண முடியுமா.இல்ல போலீஸ் காண்டாக்ட் பண்ணுங்க .. வைத்துவிட்டான்.மறுபடி ...Read More

38

இரவுக்கு ஆயிரம் கைகள் - 38

ராம் மிகுந்த குழப்பத்தில் இருந்தான். ஒரு வேளை சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிருப்பாளோ ? இல்லை மின்சார ரயிலில் அடிபட்டிருப்பாளோ என யோசித்தான் . அவசர அவசரமாக போலீசாரை தொடர்பு கொண்டான் . அவனுடைய ஊகம் சரிதான் . ரெண்டு நாள் கழித்து அவர்கள் அழைத்தார்கள் . குறிப்பிட்ட தேதியில் நீலா ரயில்வே ட்ராக்கில் அடிபட்டு செத்துவிட்டாள் என சொன்னார்கள் .ட்ராக்கில் அடிபட்டு செத்தது நீலாதான் என காமாட்சி உறுதி செய்தாள். தேவிகா,ரம்யா, காமாட்சி மூவரும் வேதனையுடன் அழுதனர் . போஸ்டமோர்டெம் ரிப்போர்ட் அவ்வளவு தெளிவாக இல்லை . ராம் இது தற்கொலையா இருக்க வாய்ப்பில்லை. தவறி போய் ட்ரைனில் அடி பட்டிருக்கலாம் என்றான் .என் husband வெளிநாட்டுலே இருந்து வரட்டும் வந்த உடனே இவங்களுக்கு ஹெல்ப் பண்றேன் என்றாள் தேவிகா.. காமாட்சியிடம் சடலம் ஒப்படைக்க பட்டது , என்னவோ என் பொண்ணு மூளியா செத்துருக்காளே என சொன்னாள் காமாட்சி .அப்டின்னா ...Read More

39

இரவுக்கு ஆயிரம் கைகள் - 39

ராம் எப்போதும் போல ஷாப்பிங் போயிருந்தான். தினசரி தேவைக்கு பொருட்கள் வாங்க போயிருந்தான். அப்போதுதான் ஸ்வேதாவை பார்த்தான் . கூடவே அவளுடைய மகள் அஞ்சலியும் வந்திருந்தாள். இவனுடைய classmate . இந்த அங்கிள் யாரு தெரியுமா பெரிய டிடெக்ட்டிவ் என அறிமுகப்படுத்தி வைத்தாள்.நான் அவ்ளோ பெரிய ஆளெல்லாம் இல்லம்மா என்றான். சாக்லேட் வாங்கி கொள்ள அஞ்சலி மறுத்தாள். ஸ்வேதா இவனுடைய போன் நம்பரை மறக்காமல் கேட்டு வாங்கிகொண்டாள். ஏன் சாக்லேட் புடிக்காதா என்றான். சற்று தள்ளி வந்து அவ friend ஒருத்தி recent ஆ suicide பண்ணிக்கிட்டா அதிலிருந்து இவ அப்செட்டா இருக்கா . யாரை பார்த்தாலும் இப்படித்தான் behave பண்றா.என்ன கிளாஸ் படிக்கிறா 9th . சரி சரி நான் போன் பண்றேன் என்றவாறு ஸ்வேதா கிளம்பினாள் . அஞ்சலி இவனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே நடந்தாள். நெஜமாவே அந்த அங்கிள் டிடெக்ட்டிவ் ஆ அம்மா என்றாள். ம்ம் ...Read More

40

இரவுக்கு ஆயிரம் கைகள் - 40

குமார் எனக்கு ஒன்னும் தெரியாது நான் சாதாரணமாத்தான் விசாரிச்சேன் என்றான். சரி உனக்கு ஏதாவது விஷயம் தெரிஞ்சா எங்களுக்கு அவசியம் சொல்லு . கண்டிப்பா சார். யாராவது மெசேஜ் பண்ணியிருக்காங்களா ? இல்லை சார் . ஒரு வேலை திவ்யா டெலிட் பண்ணியிருக்கலாம். திவ்யாவுடைய அப்பாவுக்கு போன் செய்தான். ஏதாவது டெலிட் பண்ணியிருந்தீங்கன்னா ப்ளீஸ் சொல்லுங்க ..ஒண்ணுமில்ல சார் . என் பொண்ணும் cousin தீபனும் கார் பார்க்கிங் ஏரியாவுல kiss பண்ண வீடியோ வந்திருந்திச்சு . ஓ அது எந்த நம்பர்லேயிருந்து வந்திருந்துச்சு .அது வேற யாருமில்ல அஞ்சலி அப்பாதான். இதை ஏன் மொதல்லேயே சொல்லலே . அவர் இப்படி செய்வார்னு நான் நெனைச்சு கூட பாக்கலே. எதுக்கும் அவர்கிட்ட விசாரிச்சு பாக்குறேன். அஞ்சலி அப்பாவுக்கு போன் போட்டான். அவர் காஞ்சிபுரத்தில் வேலை பார்த்து வந்தார். நீயெல்லாம் ஒரு மனுஷனா ஏதோ சின்ன பசங்க தப்பு பண்ணிட்டாங்க அத ...Read More

41

இரவுக்கு ஆயிரம் கைகள் - 41

மண்டபம் மாறி சுட்டிருக்கலாமோ என்ற எண்ணத்தில் பக்கத்து கல்யாண மாப்பிளை அட்ரஸ் வாங்கி விசாரித்தனர். அந்த ஆளுடைய போட்டோவை காண்பித்து மேலே உள்ள மண்டபத்துக்கு வந்தாரா கேட்டார்கள். அங்கு எடுக்கப்பட்ட விடீயோவையும் சோதித்தார்கள் . அதிலும் இல்லை. இப்போ என்ன பண்றது ராம் என்றான். நீ ரேவதியை பாரு நான் இந்த investigation கவனிச்சிக்குறேன் என்றான். அடுத்த கட்டமாக ரேவதியின் தோழிகள் சில பேரை விசாரித்தான். அவர்கள் விக்ரம் பேரைத்தான் சொன்னார்கள். விக்ரம் பல வழிகளில் இந்த கல்யாணத்தை முடக்க முயற்சித்ததாக சொன்னார்கள்.ரவி உனக்கு love ப்ரோபோசல்ஸ் வந்து அதை ரிஜெக்ட் பண்ணினியா என்றான் ராம். ஆமாம் ஒன்னு ரெண்டு ப்ரோபோசல் வந்தது அதை அப்படியே விட்டாச்சு ம்ம் அவங்க கல்யாணத்துக்கு வந்தங்களா . ஸ்வேதா வந்திருந்தா ஆனா கீதா வரலே . என்னாச்சு கீதாவுக்கு ? என்னவோ ஆபீஸ்ல urgent மீட்டிங் னு சொன்னா .. நான் அவங்ககிட்டே ...Read More

42

இரவுக்கு ஆயிரம் கைகள் - 42

கிரீஷ் ராம் ஆஃபீஸிற்கு வந்திருந்தான் . என்ன சார் ஏதாவது clue கெடச்சுதா சார். நானும் அவங்க வீட்டு பக்கத்துல எல்லாம் விசாரிச்சேன் யாருமே எதுவும் பொண்ணை பத்தி குறையா சொல்லலே . அந்த பொண்ணு நல்ல பொண்ணுனுதான் சொல்றாங்க. உங்க சைடு யாராவது?. நான் எங்க வீட்டுக்கு ஒரே பையன். எங்க அப்பா போன வருஷம் இறந்துட்டார் சார். வேற யாரும் எங்க கூட இல்ல சார். எனக்கு கொஞ்சம் time கொடுங்க கிரீஷ். எப்படியும் அவனை புடிச்சிடலாம். போஸ்டமோர்டெம் ரிப்போர்ட் குடுத்தாங்களா . இந்தாங்க சார் அதோட copy .வினிதாவுக்கு brothers ,சிஸ்டேர்ஸ் யாராவது இருக்காங்களா .ஒரே ஒரு சிஸ்டர் அவ காலேஜ் படிக்கிறா. வினிதாதான் மூத்தவ. ரொம்ப பொறுப்பா இருந்தா. அப்பா அம்மா கிடையாது. கல்யாணத்துக்கு முன்னாடி யாரையாவது நீங்களோ இல்லை அவர்களோ லவ் பண்ணீங்களா இல்ல சார் எனக்கு அதுக்கெல்லாம் நேரம் இல்ல சார். ...Read More

43

இரவுக்கு ஆயிரம் கைகள் - 43

ப்ரவீனா ரூமை பார்க்கலாமா ? பார்க்கலாம் சார். மாடியிலேதான் அவ ரூம் இருக்கு. என்ன நடந்துச்சு ? நீங்க அப்போ எங்க இருந்தீங்க ? நைட் 11 இருக்கும் திடீர்னு யாரோ வந்து என் ரூம் கதவை தட்டுனா மாதிரி இருந்தது. பார்த்தா ப்ரவீனா என்னாச்சுன்னு கேட்டேன் ? வயிறு ரொம்ப வலிக்குது, வொமிட் பண்ணிட்டேன்,மயக்கமா வருதுன்னு சொன்னா.. உடனே ஹாஸ்பிடல் போலாம்னு நானும் அப்பாவும் கிளம்பினோம் . கார்ல போகுறப்பையே அவ மயக்கமாயிட்டா. வேற ஏதாவது அதுக்கு முன்னாடி சொன்னார்களா . என்ன சாப்பிட்டேன்னு கேட்டதுக்கு கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிட்டேன்னு சொன்னா . அதான் அவ கடைசியா சொன்னது. ஹாஸ்பிடல் ல எவ்வளவோ ட்ரை பண்ணியும் காப்பாத்த முடியல . கேக்குறேனு தப்பா நினைக்காதீங்க ப்ரவீணாவுக்கு boyfriend யாரும் இருந்தாங்க ? அப்படியெல்லாம் யாரும் இல்லை சார்.எதுக்கும் நான் அவ கூட படிக்கிற என் cousin காவ்யா கிட்ட ...Read More

44

இரவுக்கு ஆயிரம் கைகள் - 44

ஸ்ரீஜாவும் ப்ரேமும் ராமை பார்க்க வந்திருந்தனர்.சொல்லுங்க என்ன விஷயம் ? எங்க அண்ணனை கொன்னுட்டாங்க சார். ம்ம் எப்போ போன வாரம் . என்ன நடந்தது? போல டாக்ஸி ஓட்ட போனவரை யாரோ கொன்னுட்டாங்க சார்.போலீஸ் என்ன சொல்லுறாங்க?. அவங்களும் எந்த துப்பும் கிடைக்காம திணறுறாங்க சார். இவர் யாரு ? இவர் நான் கல்யாணம் பண்ணிக்க போறவரு. எப்போ கல்யாணம் அடுத்த மாசம் சார். உங்க அண்ணன் வாடகை டாக்ஸி ஓட்டுனாரா இல்லை சார் சொந்தமா டாக்ஸி வெச்சிருந்தாரு.நீங்க அவரை பத்தின டீடெயில்ஸ் குடுத்திட்டு போங்க நான் என்னால முடிஞ்சது செய்றேன்.உங்க அண்ணன் பேரென்ன குமார். சார் அப்புறம் இன்னொரு விஷயம். சொல்லுங்க எங்க அண்ணன் கூடவே சுத்திகிட்டு இருப்பாரு அவரு friend ரமேஷ் அவரையும் அண்ணா இறந்த அன்னிலேர்ந்து காணோம். உங்க அண்ணன் மேல போலீஸ் கேஸ் ஏதாவது இருக்கா ? இல்ல குடிப்பழக்கம் உள்ளவரா ?அப்படியெல்லாம் ...Read More

45

இரவுக்கு ஆயிரம் கைகள் - 45

பாஸ் சதீஷ்ங்கிறவங்க உங்களை பார்க்க வந்திருக்காரு. என்ன விஷயமா? அவரோட கேர்ள் பிரண்டு murder சம்பந்தமா .சரி வர சொல்லு தீபு. வாங்க சதீஷ் உட்காருங்க. என்ன நடந்தது. என் பேரு சதீஷ் இங்க பக்கத்துல குமரன் இன்ஜினியரிங் காலேஜ் ல பைனல் இயர் படிக்கிறேன்.நானும் என் classmate ப்ரியாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புனோம். மூணு நாளைக்கு முன்னாடி அவளை காணோம்னு போலீஸ்ல complaint கொடுத்து இருந்தோம். நேத்து காலைல highway ஓரத்துல அவ இறந்து கிடந்ததா தகவல் வந்தது.போலீஸ் விசாரிக்கிறாங்க ஆனா எனக்கு அதுல நம்பிக்கையில்லை . நீங்கதான் எப்படியாவது அந்த கொலைகாரனை கண்டுபிடிச்சி கொடுக்கனும். கழுத்தை நெறிச்சு கொன்னுருக்காங்க சார். ம்ம் ஏதாவது பாலியல் ரீதியா துன்புறுத்தி இருக்காங்களா ?அப்படியெல்லாம் எதுவும் இல்லை சார். அவ போட்டிருந்த கோல்ட் செயின் மட்டும் காணாம போயிருக்கு. போலீஸ் நகைக்காக நடந்த கொலைன்னு சந்தேகப்படுறாங்க.உங்க போன் number,ப்ரியாவோட போட்டோ மத்த ...Read More

46

இரவுக்கு ஆயிரம் கைகள் - 46

ராமுக்கு ஏற்கனவே போன் செய்த ஆள் திரும்ப போன் செய்தான். சொல்லுங்க சார் நான் உங்களை மீட் பண்ணனும் . எதுக்காக? விக்ரம் இந்த கொலையை சொல்லறீங்க?அந்த நேரத்துல அவன் என் கூடத்தான் இருந்தான்.சரி எங்க மீட் பண்ணலாம். நானே மெசேஜ் பன்றேன் என்றான். மெசேஜ் வந்ததும் ராம் அவன் சொன்ன இடத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு போய் சேர்ந்தான்.என் பெயர் வருண் விக்ரமும் நானும் கிளோஸ் friends தான்.. அவன் கொலை செஞ்சிருப்பானு எனக்கு தோணலை.பின்ன எப்படி அவனோட கைரேகை ப்ரியா மேல வந்தது . ப்ரியா கொல்லப்பட்டதா சொல்லப்படுற நேரத்துல என் கூட பார்ல இருந்தான் சார் . அந்த ஜீப் அவனோடாதில்லை. என்னுடையது, நீங்க இதை போலீசில் சொல்லியிருக்கலாமே? அவன் ஏன் surrender ஆனான்னு புரியாம நான் போய் சொன்னாலும் யாரும் நம்ப போறதில்லை. வருண் ஏதாவது எவிடென்ஸ் இருக்கா அவன் உங்க கூட இருந்ததுக்கு? அப்படி ...Read More

47

இரவுக்கு ஆயிரம் கைகள் - 47

ராமை சந்திக்க பிரேமா என்றொரு பெண்மணி வந்திருந்தார்.கூடவே அவருடைய பெண்ணான ப்ரீத்தியும் வந்திருந்தாள்.ப்ரீத்திக்கு 18 வயதிருக்கும்.உக்காருங்க மேடம் என்ன விஷயம் என்றான். இது நடந்து 10 மேல ஆச்சு .அதனால போலீஸ் கூட இந்த கேஸ் எடுக்க மாட்டேங்கிறாங்க.பரவாயில்ல சொல்லுங்க மேடம் என்னால முடிஞ்சது செய்யுறேன்.இவ பேரு ப்ரீத்தி என் ஒரே பொண்ணு.இவளோட அப்பா ஜெகன் சமீபத்துல கார் accident ல இறந்துட்டார். 10 வருஷம் முன்னாடி இவளை கடத்திட்டு போயிட்டாங்க.அப்போ 3 லட்சம் பணம் கொடுத்தாதான் இவளை விடுவேன்னு சொன்னாங்க. நாங்களும் போலீசுக்கு போகாம அந்த பணத்தை குடுத்து இவளை அழைச்சுட்டு வந்தோம். ஆனா அதுக்கப்புறம் போலீஸ் எவ்ளோ முயற்சி பண்ணியும் அவங்களை கண்டு பிடிக்க முடியலை. இப்போ என்ன பிரச்னை?இவங்க அப்பா ஜெகன் இறந்தது accident இல்லையானு ஒரு சந்தேகம்.ஏன்னாஅவர் அந்த சம்பவத்தை மறக்கலை . நமக்கு நடந்த மாதிரி வேற யாருக்கும் நடக்க கூடாதுன்னு சொல்லிகிட்டே ...Read More

48

இரவுக்கு ஆயிரம் கைகள் - 48

தைபூசமன்று ராம், ப்ரீத்தி, தீபு, பிரேமா எல்லோரும் அந்த முருகன் கோவிலுக்கு சென்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வருவோரை கவனிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக வரவில்லை. அவன் வீட்டில் விசாரித்த போது அவருக்கு உடம்பு சரியில்லாததால் இந்த வருஷம் வர முடியலன்னு அவரோட friend மூலமா சொல்லி விட்டாரு. ராம் நம்ப முடியாமல் சிசிடிவி காட்சிகளை மறுபடி ஆராய்ந்தான்.கேரளாவில் இருந்து வநத குரூப் ஒன்று இன்னும் அங்கேயே தங்கி இருப்பதாக lodge ஒன்றில் இருந்து தகவல் கிடைத்தது .ராம் விரைந்து அங்கு போனான்.ஆமா சார் ஒரு ஆள் நேத்து கோவிலுக்கு போனப்போ மயக்கம் போட்டு விழுந்துட்டாரு . அவங்க இப்போ ஹாஸ்பிடல் போயிருக்காங்க.ஸ்ரீதேவி நர்சிங் home .உடனடியாக அங்கு ப்ரீத்தியை அனுப்பி வைத்தான். ப்ரீத்தியை பார்த்ததும் ராஜு உறைந்து போனான். எப்படி இருக்கீங்க ராஜு அங்கிள் ? அங்கு இருந்து வேகமாக வெளியேற முயற்சித்த போது போலீஸ் அவனை ...Read More

49

இரவுக்கு ஆயிரம் கைகள் - 49

தீபு கங்காதரன் ப்ரொபைல் ரெடி பண்ணியாச்சா? இல்ல பாஸ் அவனை பத்தி அதிக அதிகமா டீடெயில்ஸ் கிடைக்கல. நான் அவங்க சம்பத்தப்பட்ட ஆளுங்கள்ட்ட பேசி எடுத்து சரி தீபு. பேக்கரி உரிமையாளரை சந்தித்தான் அன்னிக்கி கடையில கூட்டம் அதிகமில்லை டீ மாஸ்டர் வெளியே போயிருந்தார்.நான் மட்டும்தான் இருந்தேன்.கடையில உட்கார்ந்திருந்த ஒரு ஆள்தான் அவங்களுக்கு தகவல் சொன்ன மாதிரி இருந்துச்சு. அவ பேசுனத நான் கேட்டேன். அவன் வந்துட்டான்டானு சொன்னன உடனே எங்கிருந்தோ டூ வீலர்ல வந்தவனுக வெட்டி சாய்ச்சுட்டு போய்ட்டானுங்க தம்பி. நான் உடனே வெளியே ஓடிட்டேன், நல்ல மனுஷன் தம்பி. போலீஸ் வேற என்னை அடையாளம் காட்ட சொன்னாங்க அதிலே எல்லோரையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. வேற ஏதாவது அவனுக வெட்டும்போது சொன்னார்களா ?இல்ல தம்பி எல்லாம் full போதையில வந்திருந்தாங்க. இதை எதோ பிளான் பண்ணித்தான் பண்ணி இருக்கானுங்க தம்பி. பாலகிருஷ்ணனை சந்திப்பது சம்மந்தமாக போன் செய்த போது ...Read More

50

இரவுக்கு ஆயிரம் கைகள் - 50

ராம் ஒரு முடிவுக்கு வந்தவங்க இருந்தான். அனால் முழு உண்மை தெரியாமல் எதுவும் செய்ய முடியாது. பரமசிவத்தை சந்தித்தான். வாப்பா ஏதாவது தகவல் கிடைச்சுதா ? ஆனால் என்னால் இப்போ ஒன்னும் சொல்ல முடியல என்றான். அப்போது கீதா வந்தால். என்ன சார் என்ன விஷயம் ?கங்காதரனுக்கு பணம் குடுத்தவங்க யாருன்னு கண்டுபிடிக்கணும் . அதான் யோசனை பண்றேன் என்றான். அவள் முகம் மாறியது. நீங்க எங்களை சந்தேகப்படுறீங்களா ?இதெல்லாம் அநியாயம் என்றாள். சே சே அப்படியெல்லாம் இல்லை. இப்போ அந்த ஒரு விஷயம்தான் மண்டைக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கு அதைத்தான் சொன்னேன்.சரி சரி நான் வேண்ணா எல்லாருடைய அக்கௌன்ட் டீடெயில்ஸ் குடுக்க சொல்றேன் . வேணாம் வேணாம் நான் பாத்துக்கிறேன். கீதா மேடம் பிரேம் இறந்ததுக்கப்புறம் அவர் சொத்து யாருக்கு வரணும்னு ஏதாவது உயில் அவர் எழுதினாரா?அப்படியெல்லாம் இல்லை சார்.நல்லா இருந்த மனுஷன் ஆனா அடிக்கடி ஒன்னு சொல்லுவாரு சாரதாவுக்கு ...Read More