இரவுக்கு ஆயிரம் கைகள் - 12

  • 2.2k
  • 792

செல்வியின் உடல் அப்புவின் உடலருகே நல்லடக்கம் செய்யப்பட்டது . தீபுவும் வந்திருந்தாள். ராகவ் கொஞ்ச நாளுக்கு இங்கேயே இருங்க ராம் என்றான் . இந்த கொலையையும் ஷ்யாம்தான் செய்தான் என கைரேகை நிபுணர்கள் உறுதிப்படுத்தினார்கள் . செல்வியுடைய உடமைகைளை ராம் ஆராய்ந்தான், அதில் விசேஷமாக ஏதுமில்லை . ரஞ்சனியும் வருத்தப்பட்டாள். லதாவிடம் ஏதாவது தகவல் கிடைத்ததா என கேட்டான் . அவள் சில விஷயங்களை சொல்லி இருந்தாள்.இப்படியே போனால் ராகவ் குடும்பத்தில் ஒருவர் கூட மிஞ்சமாட்டார்கள் என நினைத்தான் .போலீஸ் பாதுகாப்பு கேட்பது கூட வீண் வேலை .வேறு சில கேஸ் அழைப்புகளும் ராமுக்கு தொடர்ந்து வந்தன .அதை எல்லாம் லதாவை பார்க்க சொல்லி விட்டான். என்ன பண்ணிட்டு வந்த ஷியாம் .செல்வியை போட்டு தள்ளிட்டேன். யாரு செல்வி அதான் அப்புவோட wife .அவளை ஏன் கொன்ன.ரொம்ப பேசுனா அவதான் என்னை காட்டி குடுத்தா .சரி நீ இங்கே இருந்தா எனக்குதான்