இரவுக்கு ஆயிரம் கைகள் - 7

  • 1.1k
  • 279

ராமுக்கும் தீபுவுக்கும் மூச்சே நின்றுவிட்டது .சஞ்சயை சிங்காரம் கொன்று விட்டான் .நாம இந்த ஊரிலேயே இருக்க வேண்டாம் கொஞ்ச நாள் ரஞ்சனி, ராகவ் கூட இருப்போம் .நமக்கும் அதுதான் safety என்றான் ராம் .என்னை தொட வந்தான்ல தூக்கி கடல்ல போடுங்கடா அப்பதான் என்னை பத்தின பயம் இருக்கும் . பென்drive ல கேமரா வெச்சது நல்லதா போச்சு. நான் இதை எதிர்பாக்கலே என்றாள் தீபு .விஷயத்தை ராகவிடம் சொன்னான் அதுக்கென்ன தாராளமா தங்கலாம் என்னோட வாடகைக்கு விட்ட வீடு இப்போ காலியாதான் இருக்கு . ஒருபுறம் ராகவ் ரஞ்சனியோடு இருக்கப்போகிறோம் என்றாலும் மறுபுறம் சிங்காரம் இன்னும் என்னென்ன வேலை செய்வானோ என்ற அச்சம் எழுந்தது . ட்ரைனில் போகலாம் என முடிவெடுத்தார்கள் தீபூவை வீட்டுக்கு போக வேண்டாம் போனால் ஏதாவது உளறிவிடுவாய் போன்ல சொல்லிடு என்றான் . ராகவ் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து வரவேற்றான் .ஊர் முழுக்க பரபரப்பை உண்டு